பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

தமிழ்ப் பழமொழிகள்



வாழாத பெண்ணுக்கு மை ஏண்டி? பொட்டு ஏண்டி?

மஞ்சள் குளி ஏண்டி?

வாழாத பெண்ணைத் தாயார் கெடுத்தாள்.

வாழாத பெண்ணைத் தாழ்வாய் உரைக்காதே. 20085


வாழாப் பெண் தாயோடே.

வாழும் குமரிக்கு வலப்புறத்தில் மச்சம்; மனையாளும் மன்னனுக்கு இடப்புறத்தில் மச்சம்.

வாழும் பிள்ளையை விளையாட்டில் தெரியும்.

(மண் விளையாட்டு.)

வாழும் வீட்டுக்கு ஒரு பெண்; வைக்கோற் படப்புக்கு ஒரு கன்று.

வாழும் வீட்டுக்கு வெறிநாய் கட்டியது போல. 20090


வாழும் வீட்டுக்கு வேட்டை நாய் வேண்டாம்.

வாழையடி வாழையாய்.

(+ வாழைக்கு ஒரு குலை.)

வாழை ஆடியும் முள் ஆடியும் வாழைக்குச் சேதம்

வாழை ஆடினானும் மூங்கில் ஆடினாலும். வாழைக்குத்தான் நஷ்டம்.

வாழை இல்லை, தையல் இலை. கை இல்லை. 20095


வாழை இளசும், வழுதலை முற்றலும் நடு.

வாழைக்காய்க் கறியும் வளர்த்த பிள்ளையும்.

வாழைக்காய்க் கூட்டும் வாத்தியார் பெண்ணும் நிஷித்தம்.

வாழைக்காய் மடங்கினது போல.

வாழைக்கு இரண்டு குலைகள் கண்டதில்லை. 20100


வாழைக்கு ஓர் இலை.

வாழைக்குக் கீழ்க் கன்று வந்து முளைப்பது போல்.

வாழைக்குக் கீழ்க் கன்று வாங்கிப் பயிர் வைக்க வேண்டும்.

வாழைக்குக் கொத்து; வழுதலைக்குத் தண்ணீர்.

வாழைக்குத் தான் ஈத்த காய் கூற்றம். 20105


வாழைக்கு வெட்டும் வழுதுணங்காய்க்குத் தண்ணீரும்.

வாழை நட்டால் தாழ நடு.

வாழைப் பழத்தில் ஊசி ஏற்றினாற்போல்.

வாழைப் பழத்தில் வழ வழ என்று ஊசி ஏறுவது போல.