பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

145

 விடிய விடியக் கதை கேட்டு ராமனுக்குச் சீதை என்ன வேண்டும் என்றானாம். 20200


விடிய விடியத் துரத்தியும் ஆண் கழுதையாகத்தான் முடிந்தது

விடிய விடியத் தேய்த்தாலும் கறுப்பு நாய் வெள்ளை நாய் ஆகுமா?

விடிய விடியப் பாடுபட்டும் விளக்குக்கு எண்ணெய் இல்லை

விடிய விடிய மழை பெய்தாலும் ஒட்டாஞ்சில்லு முளைக்காது

(ஒட்டாங் கிளிஞ்சல். கொட்டாங்கச்சி.)

விடிய விடிய ராமாயணம் கேட்டுச் சீதைக்கு ராமன் என்ன ஆகவேணும் என்றானாம். 20205

(சீதைக்கு ராமன் சிற்றப்பா என்றாளாம்.)


விடியற் காலத்தில் கல்யாணம்; பிடியடா பயலே பாக்கு வெற்றிலை

விடியற்காலைத் தூக்கம் வெல்லம் போல

விடியாமல் உலை வைத்து வடியாமல் விடுவேனோ?

விடியா மூஞ்சி வேலைக்குப் போனால் வேலை கிடைத்தாலும் கூலி கிடைக்காது

விடியும் மட்டும் இறைத்தவனும் விடிந்த பின்பு சாலை உடைத்தவனும் சரி 20210


விடியும் மட்டும் குரைத்தாலும் வீட்டு நாய் வேட்டை நாய் ஆக முடியுமா?

விடியும் மட்டும் மழை பெய்தாலும் ஒட்டாங் கிளிஞ்சில் கரையுமா?

விடியும் மட்டும் மழை பெய்தாலும் ஒட்டாஞ்சில்லுக் கரையுமா?

(ஒட்டாங் கிளிஞ்சல்.)

விடு விடு சங்கிலி, வேப்பஞ் சங்கிலி, விட்டால் குடி கெட்டும் போம்.

விடை தனிக்கு அஞ்சாது. 20215


விண் ஏற தப்பினாலும் கண் ஏறு தப்பாது

(பொய்த்தாலும் பொய்க்காது.)

விண் காட்டப் போனவன் கண் காட்ட வந்தானாம்

விண்டு அழுத பிள்ளையைக் கொண்டு அணைப்பா இல்லை

விண்ணாண எங்கே கிண்ணாரம் எங்கே

விண்ணு மாலைக்குக் கல்யாணம்; விழுந்து கோட்டா சாம்பலா 20220


வின்தொடு கொடுமுடி மேகுவும் வீறளி தென்திசைக் கிரியும்

விண் பொய்த்தால் மண் பொய்க்கும்

விண் வலிதேச, மண் வலிதோ?