பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

இவ்வாறு தொல்காப்பியர் தம் நூலுள் ஏறத்தாழ இருநூறு இடங்களுக்கு மேல் கூறியிருத்தலைக் காணலாம். இவற்றோடு, அவர் தமிழ்நாட்டில் தமக்கு முன்பு பன்னெடுங் காலமாக வழக்கில் இருந்து வந்த மரபினை நன்கு கவனித்தே நூல் செய்தார் என்பது அவர் எடுத்தாளும் பின்வரும் தொடர்களால் நன்கு துணியப் பெறும்:

"தொல்லியல் மருங்கின் மரீஇய மரபே " (புள்ளி மயங்கியல், 60)

"பண்டியல் மருங்கின் மரீஇய மரபே" (வேற்றுமை மயங்கியல், 7)

" தொன்னெறி மரபின் தோன்ற லாறே (மரபியல், 27) “

". . . . . . . . . . . . . . . வழக்கியன் மரபே"(வினையியல், 47)

"பாடலுட் பயின்றவை நாடுங் காலை"(அகத்திணையியல், 8)

"சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே" - (அகத்திணையியல், 5) *

"பாங்குற வுணர்ந்தோர் பன்னுங் காலை" (செய்யுளியல், 51)

தொல்காப்பியர் காலத்திலும் அவர்க்கு முன்னும் தமிழ் நூல்கள் பல இருந்தன என்பதைப் பல நூற்பாக்களால் அறியலாம். முதல்நூல், தொகைநூல், விரிநூல், தொகை

ancient times, the Tolkappiyam will easily hold an important płace.................. it is no wonder that this antique work should have through the ages excited the interest and curiosity of the Tamil people. Its subject matter is the history of the Tamil race itself, the life of the ancient Tamil country.

—T. R. Seshe Ayyangar, Dravidian India,

pp. 91-92..