பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

179


போலும்!” அப்பகுதி கி. பி.7ஆம் நூற்றாண்டில் ரேநாடு" எனப்பட்டது. அதனை ஆண்டவர் தம்மைச் சோழர்" என்றும் கரிகாலன் மரபினர்' என்றும் பட்டயங்களிற் கூறிப் பெருமை கொண்டனர்." அந்த நாட்டைச் சூழிய (சோழ நாடு) என்று ஆம் நூற்றாண்டில் யுவான் சுவாங்கு என்ற சீன வழிப்போக்கன் குறித்துள்ளான். காகந்தி என்பது சோழர் துறைமுக நகரான காவிரிப்பூம் பட்டினத்தின் பெயர். அப்பெயர் நெல்லூர் மாவட்டத்துக் கூடுர்ப் பகுதிக்குப் (கடல் கொண்ட காகந்தி நாடு எனப்) பெயரிடப்பட்டது. அப் பகுதியை ஆண்டவர் தம்மைச் சோழர்- கரிகாலன் மரபினர் என்றனர். இவர்கள் வழிவந்த தெலுங்குச் சோழர் (சோடர்) பின் நூற்றாண்டுகளில் சோழப் பேரரசர்க்கடங்கிக் குண்டுர், நெல்லுரர். வடஆர்க்காடு, செங்கற்பட்டு, கடப்பை மாவட்டங்களை ஆண்டுவந்தனர் என்று கல்வெட்டுகள் தெரிவிக் கின்றன. விசயநகர வேந்தர்க்கடங்கிய சிற்றரசர் சிலரும் தம்மைக் கரிகாலனின் மரபினர் என்று கூறிக்கொண்டதை நோக்க, கரிகாலன் ரே நாட்டையும் தொண்டை நாட்டையும் வென்றவன் என்பது தெளிவாகிறதன்றோ?

கரிகாலன் காவிரியின் கரைகளை உயர்த்தியவன் என்று தெலுங்குச் சோழர் கல்வெட்டுகள் கூறுகின்றன. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் பாடப்பெற்ற கலிங்கத்துப் பரணியும் (197) இச்செய்தியைக் குறித்துள்ளது. சோழன் ஒருவன் பன்னிராயிரம் சிங்களவரைச் சிறை செய்து சோணாடு கொண்டு சென்று காவிரிக்குக் கரையிடுவித்தான் என்று. இலங்கை வரலாறு கூறுகின்றது. பராந்தகன் முதலிய சோழப் பேரரசர் காலக் கல்வெட்டுகளில் காவிரியின் கரை கரிகாலக்கரை' என்று குறிக்கப்பட்டுள்ளது. .

  • թ. 7. 3. Ayyangar, History of the Tamils, pp. 84s

—347. ; : ,

25. к. А. м. Sastry, Cholas, Vol. 1, pp. 121–1a2.