பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

தமிழ் மொழி இலக்கிய வரலாறு

படை ஆசிரியரான நக்கீரர் சங்க கால நக்கீரரின் வேறாவர் என்று கொள்வதே ஏற்புடையதாகும்.

ஆவிநன்குடி முருகற்குரிய இடமாகச் சங்க நூல்களிற் குறிக்கப்பட்டிலது. எனவே, சங்க காலத்திற்குப் பின்னரே ஆவிநன்குடியில் முருகனுக்குக் கோவில் உண்டாயிருக்கலாம். திருமுருகாற்றுப்படை தொல்காப்பிய இலக்கணத்திற்கு மாறுபட்டது; ஆயின் நடை ஏறத்தாழச் சங்கச் செய்யுட்களின் நடையை ஒத்துள்ளது.

முருக வணக்கம் சங்க காலத்திற் சிறப்புற்றிருந்தது. பரிபாடலில் முருகனைப் பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கி. பி. 6முதல் உண்டான நூற்றாண்டுகளில் சிவ வணக்கமே சிறப்புறலாயிற்று என்பதற்குப் பன்னிரு திருமுறைகளே ஏற்ற சான்றாகும். இவை அனைத்தையும் நோக்க, திருமுருகாற்றுப்படை சங்க காலத்திற்குப் பின்பு கி. பி. 300 க்குப் பின்பு) அப்பர் சம்பந்தர்க்கு முன்பு (கி. பி. 600 க்கு முன்பு) பாடப்பட்டிருக்கலாம் என்று கூறுதல் பொருத்தமாகும்.8

சங்க கால நூல்களுள் தொல்காப்பியத்திலும் மணிமேகலையிலும் கடவுள் வாழ்த்து இல்லை. சிலப்பதிகாரத்தில் திங்கள், ஞாயிறு, மழை என்னும் மூன்றையும் போற்றும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருக்குறளில் கடவுள் வாழ்த்து இடம் பெற்றுள்ளது. அஃது இடைச் செருகல் என்று கூறுவாரும் உளர். தொகை நூல்கள் பின்பு தொகுக்கப்பட்டவையாதலின் கடவுள் வாழ்த்துச் சேர்க்கப்பட்டது. பின்னர்த் தோன்றிய நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடுதல் புலவர் மரபாயிற்று.

பத்துப் பாட்டுள் 9 பாடல்கள் தொகுக்கப்பட்ட காலத்தில், பின் தோன்றிய திருமுருகாற்றுப்படையை (அது


8. Prof. T. P. Minakshisundaram's 61st Birthday Commemoration volume. P. 70.