பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

132



மரப்பெயர்த் தொகுதிக்குள் புகுந்து, பலவகை மரஞ்செடி கொடிகளின் பெயர்களை அறிந்து கொள்வதன் வாயிலாகவாவது மனக்கண்ணைக் குளிரச் செய்யலாம். பெரிய பெரிய அரசாங்கத் தோட்டங்களைக் (Botonical gardens) காட்டிலும் இம் மரப் பெயர்த் தொகுதி மிக மிகப் பெரியது.

இத்தொகுதியில், பற்பல விதமான மரஞ்செடி கொடிகளைக் குறிக்கும் பெயர்கள் கூறப்பட்டிருப்பதோடு அவற்றின் இளமைப் பெயர்களும், அவற்றின் உறுப்புக்களாகிய கிழங்கு, வேர், தோல், கிளை, முள், வைரம், தளிர், இலை, மொட்டு, பூ, பூங்கொத்து, தாதுப்பொடி, காய், கனி, கொட்டை, பயறு, தானியம் முதலியவற்றின் பெயர்களும் பலபடக் கூறப்பட்டுள்ளன. மாதிரிக்காகச் சில காண்பாம்:

மரஞ்செடி கொடிகளின் சிறிய கூட்டமாகிய பூங்கா (நந்தவனம்) என்பதைக் குறிக்கப் பதினொரு பெயர்களும், பெரிய கூட்டமாகிய காட்டைக் குறிக்க இருபத்துமூன்று பெயர்களும், மூங்கில் என்னும் ஒரு வகை மரத்திற்கு மட்டும் இருபத்தைந்து பெயர்களும் கூறப்பட்டுள்ளன. அவை வருமாறு:—

[நந்தவனத்தின் பெயர்]

“தேம் பொழில், மரக்கா, தோட்டம், துடவை,
உய்யானம், சோலை, வனம், உத்தியானம்,
தண்டலை, கானம், அடவி, பதினொன்றும்
ஈண்டிய நந்தன வனமென இசைப்பர்.”