பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

202



(14). சாவகம்:—இந்தியப் பெருங்கடலில் (Indian Ocean) ஏறக்குறைய மூவாயிரம் தீவுகளைக் கொண்டதாய் ‘இந்தோனேழ்சியா’ என்னும் நாடு இன்று விளங்குகிறது. இதன் தலைநகராகிய சாகர்த்தா நகர், சாவா (Java) என்னும் தீவில் உள்ளது. இதன் பக்கத்தில் சுமத்ரா என்னும் பெரிய தீவு உள்ளது. இந்தச் சுமத்ரா—சாவா பகுதியினை நம்மவர் சாவகம் என்றும், ஈண்டு வழங்கிய மொழியினைச் சாவக மொழி என்றும் அழைத்தனர். இந்தப் பகுதியை அடுத்து மலேயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உள்ளன. இங்கெல்லாம் பழங்காலத் தமிழ் மன்னர்கள் படையெடுத்துச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. இன்றும் இப் பகுதிகளில் தமிழ் மக்கள் பரவலாக வாழ்கின்றனர். ஆனால், மலேயா, சிங்கப்பூர், இந்தோனேழ்சியா ஆகிய பகுதிகளில் இன்று பேசப்படும் மொழி ‘மலாய் மொழி’ என அழைக்கப்படுகிறது.

(15) சீனம்:—இந்தியாவின் வடக்கேயுள்ள சீன நாட்டில் வழங்கும் மொழி இது; ஓவிய எழுத்துக்களைக் கொண்டது; மேலிருந்து கீழ் நோக்கி ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதப்படுவது.

(16) காம்போஜம்:—இந்தியாவின் வடமேற்கு (பாகிஸ்தான்-பெஷாவர்) எல்லையைச் சேர்ந்த ஒரு பகுதி காம்போஜம் ஆகும். இங்கே பேசப்பட்ட மொழி காம்போஜ மொழியாம். தென் கிழக்கு ஆசியாவில் உள்ள ‘கம்போடியா’ என்னும் நாடும் காம்போஜம் எனப்படுகிறது.

(17) பருணம்:—ஒரு வட இந்திய மொழி.

(18) பப்பரம்:—இஃதும் ஒரு வடக்கு மொழியாம்.