இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுந்தர சண்முகனார் 117
அரசைக் கைப்பற்றியதாகவும் வரலாறு கூறுகிறது. குமணனது அரசை அவன் தம்பி பற்றவில்லையா? இந்தப் பட்டியல் மிகவும் நீளும். ஈண்டு,
"உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா உ
டன் பிறந்தே கொல்லும் வியாதி" (மூதுரை-20)
(நல்வழி-24)
என்னும் ஒளவையின் அமிழ்தமொழிகளும், அம்பிகாபதி காதல் காப்பியம் என்னும் நூலில் உள்ள
- "ஒருமகன் ஈட்டி உள்ள
- உயர்பொரு ளதனில் பங்கு
- தெருமகன் கேட்பான் பற்றான்
- திருடனைத் தவிர, தாயார்
- தருமகன் மட்டும் பங்கு
- தாஎனத் தருவான் தொல்லை
- ஒருவயிற் றுப்பி றந்த
- உறவுஅவன் காட்டும் கத்தி"
என்னும் பாடலும் ஈண்டு எண்ணத் தக்கன.
இவ்வாறு சில பொருத்தமான சூழ்வுரைகளைக் கூறி வீடணனை ஏற்றுக் கொள்ளலாம் என அனுமன் இராமனிடம் தனது கருத்தை வெளியிட்டான்.
வீக-வாழ்க
அனுமன் கூறியதையே இராமன் ஏற்று வீடணனுக்குப் புகலிடம் அளிக்க எண்ணிக் கூறுகிறான்:
என்னை அடைக்கலமாக அடைந்தவனை ஏற்றுக் கொள்வதால், வெற்றி கிடைப்பினும் தோற்பினும் அழியினும் அழியாது வாழ்வதாயினும் எப்படியாயினும் கைவிடாமல் ஏற்க வேண்டும்.