பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 | தமிழ் இலக்கிய வரலாறு தலால் இனிதுணரலாம். இவ் வுண்மையைச் சங்க நூல்களைப் பயின்றோர் யாவரும் அறிவரெனினும், எடுத்துக்காட்டாகச் சிலவற்றை ஈண்டுக் குறிப்பிடுதல் பொருத்தமுடையதேயாம். திருக்குறளில் நட்பாராய்தல் என்னும் அதிகாரத்திலுள்ள 4 நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்- வீடில்லை நட்பாள் பவர்க்கு '1 என்ற குறள் வெண்பாவைக் கடைச்சங்கப் புலவருள் ஒருவராகிய கபிலர் 4 பெரியோர் நாடி நட்பினல்லது--நட்டு நாடார் தம் மொட்டியோர் திறத்தே ' (நற்றிணை, பா. 32) என்ற பாடலில் எடுத்தாண்டிருத்தல் காண்க. திருக்குறளில் கண்ணோட்டம் என்னும் அதிகாரத்திலுள்ள ' பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க-நாகரிகம் வேண்டுபவர்' என்ற குறள் வெண்பாவின் சொல்லையும் பொருளையும் கடைச்சங்கப் புலவர் ஒருவர், " முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்நஞ்சும் உண்பர் நனிநா கரிகர் '3 என்று நற்றிணைப் பாட லொன்றில் அமைத்துப் பாடியிருத்தல் அறியத்தக்கதாகும். திருக் குறளில் செய்ந்நன்றியறிதல் என்னும் அதிகாரத்திலுள்ள - எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை -- செய்ந்நன்றி கொன்ற மகற்கு '4 என்ற குறள் வெண்பாவின் பொருளைக் --கடைச்சங்கப் புலவராகிய ஆலத்தூர்கிழார், நன்றியறிதல் என் முய்வில்லை- சொருளைக் ' ஆன் முலை யறுத்த அறனி லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன் செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென அறம்பா டிற்றே யாயிழை கணவ '5 1. திருக்குறள், நட்பாராய்தல், 1 2. ஷ கண்ணோட்டம், 10. 3. நற்றிணை, 355. 4. திருக்குறள், செய்க்நன்றியறிதல், 10 5. புறம். 34.