பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிறமொழிகளும் புறச்சமயங்களும் 21 னன்.1 அவற்றுள், அபிதம்மாவதாரம் என்ற நூலை, அரண் மனைகளும் பூஞ்சோலைகளும் செல்வம் நிறைந்த வணிகர்களும் உள்ள காவிரிப்பூம்பட்டினத்தில் கண தாசனால் அமைக்கப் பட்டிருந்த ஒரு பெரிய பௌத்தப்பள்ளியில் தான் தங்கியிருந்த காலத்தில் சுமதி என்ற மாணவன் வேண்டிக் கொண்டவாறு எழுதிமுடித்த செய்தியை அதன் இறுதியில் புத்த தத்தன் கூறி யிருப்பது குறிப்பிடத்தக்கது.2 அன்றியும், சோழநாட்டில் காவிரியால் வளம் பெற்ற பூதமங்கலம் என்றநகரில் வெணுதாசன் என்பவனது சிறந்த பள்ளியில் தான் இருந்த நாட்களில் எளிதில் தன் மாணவர்களும் பௌத்த பிட்சுக்களும் சுருங்கிய காலத்தில் கற்றுணருமாறு விநயவிநிச்சயம் என்னும் நூல் இயற்றப் பெற்றது என்றும், அது களப்பிரகுல வேந்தனாகிய அச்சுத விக் கந்தன் என்பவன் தமிழ் நாட்டில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த போது தொடங்கி எழுதி முடிக்கப்பெற்றது என்றும் அந்நூலின் இறுதியில் அவ்வாசிரியன் குறித்திருப்பது அறியற்பாலதாகும்.3 இவற்றால் சோழநாடு களப்பிரர் ஆட்சிக்குட்பட்டிருந்த உண்மை யும் அவர்களது ஆளுகையில் பௌத்த சமயமும் பாலி மொழியும் ஆதரிக்கப்பெற்று அவை எங்கும் பரவிய செய்தியும் நன்கு புலப் படுதல் காண்க. தமிழ் நாட்டில் அக்காலத்தில் நிலவிய பௌத்த சமயகுரவர் பதின்மர் பல்வகை நூல்கள் எழுதியுள்ளனர் என்றும் காஞ்சிமாநகர் ஒன்றில்மாத்திரம் வேறு பௌத்த ஆசிரியர் இருபதின்மர் பாலிமொழியில் பல பௌத்த சமய நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள் என்றும் கந்தவம்சம் என்ற பௌத்த நூலொன்று கூறுகின்றது.4 அன்றியும், பாலி 1. Dr. S. Krishnaswami Aiyangar Commemoration Volume, pp. 242 & 244, 2. Ibid, p. 243; The Colas. Vol. I. p. 119. History of the Tamils -Mr. P. T. Srinivasa Aiyangar, pp. 528 and 529. s. Ibid, pp. 529 and 53). 1. Dr.S. Krishnaswami Aiyangar Commemoration Volums.p.244.