பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கடைச்சங்க வீழ்ச்சிக்குக் காரணம் தொகையாக்கினானும்.........பெற்றொன்றுயர்த்த பெருமான் '1 என்று மதுரையம்பதியிலிருந்த கடைச்சங்கத்தைக் குறித் துள்ளார். இப்பெரியார் இருவரும் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் முதல்- இடைப்பகுதிகளில் நம் தமிழகத்தில் விளங்கியவர்கள் என்பது வரலாற்றாராய்ச்சியாளர்களால் ஐயமின்றித் துணியப் பட்ட செய்தியாகும்.2 எனவே, கடைச்சங்க காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாதல் வேண்டும். ஆகவே, அச் சங்ககாலம் கி. பி. எட்டாம் நூற்றாண்டென்பார் கூற்றுச் சிறிதும் பொருந்தாமை காண்க. இதுகாறும் ஆராய்ந்தவாற்றால் கடைச்சங்ககாலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டெனவும் கி. பி. எட்டாம் நூற்றாண் டெனவும் கூறுவோர் கொள்கைகள் தக்க ஆதாரங்களின்றித் துணியப்பெற்றவை என்பது நன்கு தெளியப்படும். ஆகவே, முதலில் ஆராய்ந்து கண்டவாறு, மதுரைமா நகரில் நிலை பெற்றிருந்த கடைச்சங்கம், கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் தான் அழிவெய்தியிருத்தல் வேண்டும்' என்பது பல்வகையாலும் உறுதிபெற்று நிற்றல் உணரற்பாலதாம். கடைச்சங்க வீழ்ச்சிக்குக் காரணம் : மதுரைமாநகரில் நடைபெற்றுவந்த கடைச்சங்கம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் அழிவுற்றமைக்குக் காரணம் யாது என்பது ஈண்டு ஆராயற்பாலதாகும். பாண்டிநாட்டில் பெரும் பஞ்சம் ஒன்று தோன்றிப் பன்னிருயாண்டு மக்களைத் துன்புறுத்தியது எனவும், அக்கொடிய காலத்தில் பாண்டி வேந்தன் சங்கப்புலவர் களைப் பாதுகாத்தற்கியலாமையால் சேரநாடு, சோழநாடு, நடுநாடு, தொண்டைநாடு ஆகிய புறநாடுகளுக்கு அன்னோரை யனுப்பி விட்டனன் எனவும் அதன் பின்னர் மதுரையம்பதியில் தமிழ்ச் 1. திருப்பாசுரம், டா. 11 2. Tamilian Antiquary, No.3. Date of Gnana Sambandar