பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கி. பி. மூ. நூ. தமிழகத்தின் அரசாங்க நிலை 15 யெழுச்சியினால் தான் மதுரைமாநகரில் நிலவிய கடைச்சங்கம் அழிவுற்றது என்பது ஐயமின்றித் துணியப்படும். கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தின் அரசாங்க நிலை பயில் ஏற்பட்ட மாறுதல்கள் : கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகமானது அதற்கு முன்னர் என்றும் கண்டறியாத துன்ப நிலையை எய்துவ தாயிற்று. இப் பெருநிலப்பரப்பானது முதல் முதல் பிற மொழியாளராகிய அயலாரது ஆட்சிக்குள்ளாகித் தன் சீருஞ் சிறப்பும் இழந்த காலம் இதுவே எனலாம். இக்காலப் பகுதியில் தமிழ்நாடு ஏதிலாரது புதிய அரசியல் முறைக்கு உட்பட்டதோடு தனக்குரிய கலை நாகரிகங்களையும் பிற சிறந்த பண்புகளையும் இழந்துவிடும்படி நேர்ந்தமையும் குறிப்பிடத்தக்க தாம். தமிழகத்தின் தென்பகுதியாகிய பாண்டிநாடு கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டியர் ஆட்சியை இழந்து களப்பிரர் ஆளுகைக்கு உட்பட்ட செய்தி முன்னர் விளக்கப்பட்டது. அங்ஙனமே, தமிழகத்தின் வட பகுதியாகிய தொண்டைநாடும் நடு நாடும் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடையில் பல்லவர் ஆட்சிக்குள்ளாயின.! நடு நாட்டிற்கும் பாண்டி நாட்டிற்கும் இடையிலுள்ள சோழ நாடும் களப்பிரர் ஆளுகைக்கு உட்பட்டதாயிற்று. ஆகவே, இக்காலப் பகுதியில் தமிழ்நாடு முழுவதும் வேற்றரசர் இருவரது ஆட்சிக்குள்ளாகி விட்டமை தெள்ளிது. அவ்விருவரும் தமிழ்மொழியைத் தம் தாய்மொழியாகக் கொண்டவரல்லர். அவர்களது ஆட்சிக் காலத்தில் பிராகிருதமே அரசாங்கமொழியாக அமைந்திருந்தது. களப்பிரர் ஆட்சியில் பாலி மொழியும் அரசாங்கத்தின் பேராதர விற்குரியதாயிருந்தமை அறியத்தக்கது. ஆகவே, கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட ஏதிலார் ஆட்சி, தமிழ் மக்களின் வீழ்ச்சிக்கு எத்துணையோ வகைகளில் அடிகோலியது 1. The Pallavas by G.J. Dubreuil, p.10; Administration and Social Life under the Pallavas by Dr. C. Minakshi, p. 6.