பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

இதில் பாண்டியர்களின் பெருமை மிகுதியாகக் கூறப்படுகிறது. பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துப் போரில் சேர சோழர்களையும் குறுநில மன்னர்களையும் வென்ற செய்தி இதில் மிகுதியாகக் கூறப்படுகிறது.

நாளங்காடி என்பது பகற்கடைகளைக் குறிக்கும். பண்டம் விற்பவர், விழா எடுப்பவர் முதலியோர் எடுத்த பல்வகைக் கொடிகள் ஆண்டுத் திகழும்.

அல்லங்காடி என்பது இரவுக் கடைகளைக் குறிக்கும்.

குறிஞ்சிப் பாட்டு

இது குறிஞ்சித் திணைபற்றி அமைந்த பாட்டாகும், இது 261 அடிகளைக் கொண்டது; ஆசிரியப் பாவால் அமைந்தது.

தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கும் கூற்றாக இப்பா அமைந்துள்ளது. ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ்ச் சுவையை அறிவுறுத்தும் பொருட்டுக் கபிலர் இதனைப் பாடினார் என்பர்.

தலைவி தோழியுடன் நீராடிப் பூக்களைப் பறித்துக் குவித்தாள் என்ற செய்தியைக் கூறும் பகுதியில் 99 மலர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.

'முத்தாலும், மணியாலும், பொன்னாலும் அமைத்த அணிகலன் கெட்டாலும் சீர் செய்து கொள்ளலாம்; மனிதரின் சால்பும், பண்பும் கெட்டுவிட்டால் அவற்றை மீண்டும் நிலை நிறுத்த முடியாது' என்னும் கருத்தைப் பின்வரும் தொடர்கள் அழகாக விளக்குகின்றன.

"முத்தினும் பொன்னினும் அத்துணை
தேர்வருங் குரைய கலங்கெடிற் புணரும்