பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209


எண்ணிப் பார்த்தால் (9x9=81) எண்பத்தொரு பழங்களே இருக்கும். இதேபோல அ ப் போ து ஆயிரம் பழங்கள் என்று சொல்லப்பட்டவற்றை எண்ணிப் பார்த்தால் (81X9=729) எழுநூற்று இருபத்தொன்பது பழங்களே இருக்கும். ஆயினும் அப்போதும் பத்து நூறு ஆயிரம்'(100x10=1000) என்றே சொல்லப்பட்டது; அந்த 1000 எ ன் பது இப்போதுள்ள 729 தான்.

இந்த கிலேயில் புதிதாக ஒன்பது (9) என்னும் எண் முளைத்தது. அதையும் சேர்த்து 1, 2, 3, 4, 5, ,ே 7, 8, 9, 10 - எனப் பத்து எண்கள் கணக்கிடப் பட்டன. புதிய பத்தைப் பத்தால் பெருக்க இப்போ அள்ள நூறு கிடைத்தது; புதிய நூறைப் பத்தால் பெருக்க இப்போதுள்ள ஆயிரம் கி ைடத்தது. இவ்வாருக, அடிப்படை எண்ணில் புதிதாக ஒன்று கூடியதால், பழைய பத்தின் இடத்தையும் பழைய நூறின் இடத்தையும் பழைய ஆயிரத்தின் இடத்தை யும் வேறு எ ண் க ள் பிடித்துக்கொள்ள, புதிய பத்தும் புதிய நூறும் புதிய ஆயிரமும் தோன்றின. இங்கிலேயில் புதிதாய் வந்தவற்றிற்குப் பெயர் கொடுக்க வேண்டுமே!

முன்னர் எட்டை யடுத்துப் பத்து இருந்தது; பின்னர் மே லு ம் ஒர் எண் முளைத்துவிட்டதால், எட்டை யடுத்திருந்த பத்து பின்னர் பழைய பத்து அதாவது தொல் பத்து’ என அழைக்கப்பட்டது. அதேபோல அடுத்த கட்டத்தில் அதாவது பத்துக் கொண்ட அடுக்கு வரிசையில், முன்னர் எண்பதை