இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
94அ.ச. ஞானசம்பந்தன்
- நார: அது என்னவோ எனக்குச் சொல்ல மனம்
- பிடிக்கவில்லை. ஒருவேளை கேள்விப்பட்டது
- தவறுதலாயிருந்தால்?
- ஆதி: தவறுதலாயிருந்தால் இருந்துவிட்டுப் போகிறது.
- நார: பாதகமில்லையே? -
- ஆதி: இல்லை சுவாமி.
- நார: ஆனால், கேள்.
- ஆதி: சொல்லுங்கள் சுவாமி.
- நார: நான் இப்படிச் சுற்றிக் கொண்டு வரும்போது
- லங்காபுரம் போயிருந்தேன்.
- ஆதி: சுவாமி! தாங்கள் லங்காபுரம் போனதும்,
- மங்காபுரம் போனதும் நான் கேட்கவில்லை.
- என் புதல்வியைப் பற்றிய சமாசாரந்தான் கேட் கிறேன்.
- அதைச் சொல்லுங்கள்.
- நார: அதைத்தானே சொல்ல நினைத்தேன். அதற்குள்
- பதறுகிறாயே?
- ஆதி: இப்பொழுது சொல்ல நினப்பதுதானோ?
- இன்னும் நினைத்தாகவில்லையோ? அதற்குள்ளே
- சொல்லப் புகுந்தது? லங்காபுரம்
- போனது கிளைக்கதையாக்கும் சுவாமி! விருதா
- நேரம் போக்கவேண்டாம். அங்கு போனது,
- இங்கு போனது என்ற உபாக்யானங்களெல்லாம்
- எனக்குத் தேவையில்லை. என் புதல்வியைப்
- பற்றிய சமாசாரம்-சொல்லுங்கள்.
- நார: சரி, சரி. நீ மிகு ஆத்திரமுடையவனாக
- இருக்கிறாய். போதும், போதும், (போக
- எத்தனிக்கிறார்)