பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

yiii

விளக்கங்களைக் கூறும் கட்டுரைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. மஞ்சரி'யில் வெளிவந்த கட்டுரைகளைச் சிறிது செப்பம் செய்து இந்த நூல் வடிவில் அமைத்தேன்.

இந்தக் கட்டுரைகள் நூல்களைப்பற்றி ஒரளவு அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று எண்ணு கிறேன். ஆழமான ஆராய்ச்சி நூலாகவோ, விரிவான திறனாய்வாகவோ, எல்லாப் பகுதிகளையும் பற்றி விளக்கும் விளக்கமாகவோ இதைக் கொள்ளக் கூடாது. தமிழ்ப் பண்டை நூல்களில் என்ன என்ன எப்படி எப்படிச் சொல்லப் பட்டிருக்கின்றன என்பதையும், நூலாசிரியர் களைப்பற்றிய செய்திகளையும் அறிந்து கொள்ள இந்தக் கட்டுரைகள் உதவவேண்டும் என்பதே என் நோக்கம்.

இதில் உள்ள கட்டுரைகளை வெளியிட உதவிய மஞ்சரி ஆயிரியர் திரு த. கா. சேனாபதி யவர்களுக்கு என் நன்றியறிவைத் தெரிவித்துக் கொள்கிறேன். -

'காந்தமலை' கி. வா. ஜகந்நாதன் சென்னை-28 - -