பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi

புரவலர்கள் போற்றி ஆதரித்த வகைகளெல்லாம்: அவற்றால் தெரிய வரும். வள்ளன்மை எவ்வெவ்வா றெல்லாம் உருப்பெறுகிற தென்பது சிந்திக்கச் சிந்திக்க வியப்பைத் தரும். தமிழ் மக்களின் வரலாற்றை அறிந்து கொள்வதற்குப் புறத்துறைப் பாடல்கள் மிகவும். உதவியாக உள்ளன. . . . . . . . பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பல நீதிநூல்கள். உள்ளன. அவற்றில் தலைசிறந்து நிற்பது திருக்குறள். மனித வாழ்க்கை உயர்வதற்குரிய நெறி முறைகளை அந்த நூல் மிக அருமையாகச் சொல்கிறது. நீதி நூல்கள் காலத் தாலும் இடத்தாலும் வேறுபடும்; பயன் இல்லாமலும் போய்விடும். ஆனால் திருக்குறளோ மனிதசாதியின் அடிப்படைப் பண்புகளைத் தொகுத்து உரைக்கிறது. அதனால் உள்ளவற்றில் பெரும்பாலான கருத்துக்கள் இன்றும் உலகிலுள்ள மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளன. தமிழுக்குத் திருக்குறள் கிடைத்தது ஒரு வரப்பிரசாதம்.

தமிழ் நாட்டில் பழந்தமிழ் நூல்களைப் படிக்கவும்: அவற்றைப் பற்றிக் கேட்கவும் அவற்றை ஆராயவும். ஆர்வம் உள்ளவர்கள் மிகுதியாகி வருகிறார்கள். மகா மகோட்ாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் சங்க நூல்களை வெளிக்கொணர்ந்த காலத்திலேயே தமிழில் ஒரு புது யுகம் தோன்றி விட்டது இப்போது பழந்தமிழ் நூல்களின் பெருமையைப் பேசுவது ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது. பிற நாட்டினர் சங்க நூல்களை மொழி பெயர்க் கிறார்கள்; ஆராய்கிறார்கள்; ஆராய்ச்சியின் பயனை நூல்வடிவில் வடித்துத்தருகிறார்கள்.உலகத் தமிழ்மாநாடு களில் சங்க இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரையைப் படிக் கிறார்கள். மேலை நாடுகளில் உள்ள பல பல்கலைக். கழகங்களில் தமிழைப் பயிற்றுகிறார்கள். தமிழ், ஆராய்ச்சித் துறையும் உண்டு.

இவ்வாறு நாளடைவில் விரிவாகவும். ஆழமாகவும் பரவிவரும், தமிழறிவும் தமிழார்வமும் தமிழருக்குப்