இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1O4 - 9 தமிழ் முழக்கம் 9
அன்பளைந்து தமிழ்மழையைப் பொழிந்த தாலே
ஆறுபல தமிழகத்தே பாயக் கண்டோம்: என்பொடிந்த தேகத்தும் எழுச்சி யூட்டும்
எம்கவிபாரதிதாசன் ஒரா றாவர்; என்பினையும் உருக்குமணிக் கவிதை சொன்ன
எங்கள்.கவி மணியாரும் ஓரா றாவர். 16
நாட்டுக்குப் பாட்டுரைத்து விருது பெற்ற
நாமக்கல் கவிஞரும்ஒர் நல்லா றாவர்;
ஏட்டுக்குள் அடங்காத கவிஞ ரான
எம்போல்வார் கிளைநதிகள் ஆவோம் கண்டீர்;
பாட்டுக்குப் பரம்பரைகள் தோன்றி நின்று
பயனல்கும் வாய்க்கால்கள் பலவும் உண்டு;
கேட்டுக்குத் துணைபோவார் கவிதை என்று
கிறுக்கிடுவர் அவரெல்லாம் வடிகால் ஆவர். 17
つエ
இந்துமதாபிமான சங்கம் காரைககுடி * 16.9.1973 o solo o – o