பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கவியரசர் முடியரசன் 0 103

நஞ்சையிலே இடமில்லை; கள்ளி காளான்

நன்றாக வளர்ந்துவரக் காணு கின்றோம். 13

'தண்ணீரை விட்டோநாம் இந்த நாட்டில்

தன்னுரிமைப் பயிர்வளர்த்தோம்? நாளும் நாளும்

கண்ணிரும் செந்நீரும் சிந்திச் சிந்திக்

காத்திருந்தோம்; கருகாமல் வளர்ப்பீர்' என்று

புண்ணான தனதுமனம் பொங்கிப் பொங்கிப்

பொழிந்தானே வானமழை! அதனைச் சற்றும்

எண்ணாமல் திரிகின்றோம்; நெஞ்சில் ஈரம்

ஏறாமல் இருக்கின்றோம் பாறை யாக, 14

மழைபெய்தும் விளைவறியாக் களிமண் ணாக

வன்பாறை நிலமாகக் கிடக்கின்றோம்நாம்;

கழைபெய்த சாறிருந்தும் அதனை மாந்திக்

களிக்காமல் எதைஎதையோ பருகு கின்றோம்;

விழைவெல்லாம், பாரதியின் எண்ண மெல்லாம்,

வெறுங்கனவாய்ப் பகற்கனவாய்ப் போவ தென்றால்

நுழைமதியன் பாவேந்தன் தனது நெஞ்சம்

நொந்தழிந்து போகானோ? நன்றோ சொல்வீர்? 15

முன்பிருந்தோர் எழுதியநூற் கடலுள் மூழ்கி

முகந்துவரும் பாரதியாம் மேகம் இங்கே