* கவியரசர் முடியரசன் 0 103
நஞ்சையிலே இடமில்லை; கள்ளி காளான்
நன்றாக வளர்ந்துவரக் காணு கின்றோம். 13
'தண்ணீரை விட்டோநாம் இந்த நாட்டில்
தன்னுரிமைப் பயிர்வளர்த்தோம்? நாளும் நாளும்
கண்ணிரும் செந்நீரும் சிந்திச் சிந்திக்
காத்திருந்தோம்; கருகாமல் வளர்ப்பீர்' என்று
புண்ணான தனதுமனம் பொங்கிப் பொங்கிப்
பொழிந்தானே வானமழை! அதனைச் சற்றும்
எண்ணாமல் திரிகின்றோம்; நெஞ்சில் ஈரம்
ஏறாமல் இருக்கின்றோம் பாறை யாக, 14
மழைபெய்தும் விளைவறியாக் களிமண் ணாக
வன்பாறை நிலமாகக் கிடக்கின்றோம்நாம்;
கழைபெய்த சாறிருந்தும் அதனை மாந்திக்
களிக்காமல் எதைஎதையோ பருகு கின்றோம்;
விழைவெல்லாம், பாரதியின் எண்ண மெல்லாம்,
வெறுங்கனவாய்ப் பகற்கனவாய்ப் போவ தென்றால்
நுழைமதியன் பாவேந்தன் தனது நெஞ்சம்
நொந்தழிந்து போகானோ? நன்றோ சொல்வீர்? 15
முன்பிருந்தோர் எழுதியநூற் கடலுள் மூழ்கி
முகந்துவரும் பாரதியாம் மேகம் இங்கே