பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கவியரசர் முடியரசன் 0 21

இன்ப வெறியேறி ஏக்கம் மிகவாகித் துன்பங் கலந்திருக்கத் தோகைக் குயில்பாடும் 20

பாட்டின் இயல்பைத்தான் பாடுவனோ? அப்பாட்டைக் கேட்டுக் கிறுகிறுத்த கேண்மையைத்தான் செப்புவனோ? மண்ணில் நிகரில்லா மங்கையினைக் கண்டவுடன் நண்ணித் தழுவி நலம்நுகர்ந்து வேறின்றி 'ஆவிக் கலப்பின் அமுத சுகந்தனிலே மேவி விழிமூடி மேலான இன்பமெனும் காதற் சுரத்தாற் கவிஞன் தனை மறந்து மேதக்க பாட்டிசைத்து மேல்நோக்கிச் செல்லுங்கால் கையிற் கிடந்திருந்த காரிகையாள் தான்மறைய ஐயவோ என்றரற்றி ஐயன்மிகப்பதறிப் 30 பாட்டை முடிக்காமல் பாதியிலே விட்டுவிட்ட பாட்டுத் திறத்தைத்தான் பாடியிங்குக் காட்டுவனோ? கட்டுக் கதைகூறிக் காவியமாப் பாடிவைத்த கட்டுக் கடங்காத கற்பனையைக் கூறுவனோ? ஓங்கும் மலையருவி ஓடோடி வந்திறங்கித் தேங்காமற் பாய்ந்து திரண்டோடும் ஆற்றினைப்போல் வேகங் குறையாமல் வீறுற்றுப் பாட்டாகப் போகின்ற சொல்லோட்டப் பொற்பைத்தான் சொல்லுவனோ? கொம்பின் எருதாய்க் குயிலாய்க் குரங்காகி நம்பி இளவரசாய் நாயகியாய்ப் பாடுவதும் 40 பெண்ணாகி ஆணாகிப் பேசுங் கதைக்கிங்கே கண்ணாகி நிற்கின்ற காவியத்தில் பங்கேற்போர் அவ்வவராய் நின்றே அழகாகப் பேசுகின்ற செவ்வியநற் போக்கினையும் செப்பி விளக்குவனோ? சொல்லுங் குயிலிசைத்த சோகத்தைச் செப்புவனோ? கொல்லுங் கொடுங்காதல் வேகத்தைக் கூறுவனோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/20&oldid=571628" இலிருந்து மீள்விக்கப்பட்டது