பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 கவியரசர் முடியரசன் 0 27

டாராரோ பாடுகின்ற அப்பாட்டுப் போதாதோ? ஒப்பாரிப் பாட்டுக்கோர் ஒப்புண்டோ? அஃதேபோல் எப்பாரில் கண்டீர்கள்? ஈடில்லாக் கற்பனையாம்; 70 நடனக்கலை பாடற் கலைசொன்னோம்; பாடல் துணையாக ஆடற் கலையும் அறிந்தவனே நம்முன்னோன்; விண்ணில் தவழ்ந்து விளையாடும் கார்முகிலைக் கண்ணெதிரில் கண்டு களித்தெழுந்த வண்ணமயில் தோகை தனைவிரித்துத் துள்ளிவிளையாடுகையில் ஒகை மிகவாக உள்ளந்தான் துள்ளியதால் அன்றுமுதல் ஆடுகிறான் ஆடுகிறான் அம்பலத்தே நின்றுநடம் ஆடுகிறான் நேரில்லாக் கூத்தே; குரவை துணங்கை கொடுகொட்டி என்று பரவிவர நாளும் பலவகையில் கண்டுநின்றான்; 80 கூத்தன் விறலி குறிக்கும் பொருளென்ன? வேத்தியலும் மக்கள் விரும்பும் பொதுவியலும் சொல்லும் பொருளென்ன? சொல்லுதலும் வேண்டுவதோ? கல்லுந்தான் சொல்லாதோ ஆடற் கலத்திறனை? மாதவித்தாய் ஆடும் மரபெல்லாம் கண்டபினும் ஏன்தவித்தாய்? நல்ல எழிற்கலைகள் கண்டவன் நீ!

ஓவியக்கலை வீட்டுச் சுவரில் விளங்குமேற் கூரைதனில் காட்டும் திறமெல்லாம் காட்டித் திரைதன்னில் ஊட்டும் பலவண்ணம் ஊட்டி உயிரோவம் தீட்டும் திறலோனைத் தேர்ந்தெடுத்தே அன்னவனைக் 90 கண்ணுள் வினைஞனெனக் கட்டுரைத்தே ஒவியத்துச் செந்நூல் படைத்துச் செழிப்படையச் செய்தவர் நாம்;

கண்ணுள் வினைஞன் - ஒவியம் வல்லான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/26&oldid=571633" இலிருந்து மீள்விக்கப்பட்டது