பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 9 தமிழ் முழக்கம் 9

நெய்தற்கலை

பாலாவி என்றிந்தப் பாரோர் புகழ்ந்தேத்த நூலாலே ஆடை நொடியிற் படைத்திருந்தோம்; பாவோ டிழையோடப் பஞ்சாலும் பட்டாலும் * ஒவா துழைத்தே உயர்ந்த கலைகண்டோம்; நெய்தற் கலையாவும் நெய்தல் உரிப்பொருளாய் எய்தாமல் இன்றும் இயக்கி வருகின்றோம்;

இலக்கியக்கலை கல்லைக் கலையாக்கிக் காடெல்லாம் வீடாக்கிச்

சொல்லிற் சுடரேற்றிச் சொல்லரிய காவியமென் 1OO றாக்கிப் படைத்தான், அருங்கலைகள் ஆற்றலெலாம் தேக்கிப் படைத்தான், தெளிதமிழின் பெட்டகம்போல் காதல் சுவைத்திருக்கக் கண்டான் அகமென்று; மோதும் பகைக்களத்து மூள்வோர் புறங்கண்டான் ஒதும் புகழ்சேர் உயர்ந்த புறங்கண்டான்; தீது சிறிதுமிலாத் தென்னாட்டான் நம்நாட்டான் ஆயுங் கலைகள் அனைத்தும் பெருக்கிநலம் தோயும் படிவாழ்வைத் துய்ந்திருந்தான்; அவ்வாழ்வு மீண்டும் தழைக்க வியனுலகம் பாராட்ட

வேண்டுமீ தென்றன் விழைவு. 110 அழகப்பர் கலைக்கல்லூரி - f to காரைக்குடி o = - | - 28.1 O.1961

நெய்தல் உரிப்பொருள் இரங்கல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/27&oldid=571634" இலிருந்து மீள்விக்கப்பட்டது