பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவில் கண்ணகி

எண்சீர் விருத்தம்

காவிரியின் புகுமுகமாம் பட்டினத்துள்

கார்தவழும் நெடுமாடவீதி ஒன்றில் பூவிரிந்து கொடிபடர்ந்து கோலஞ் செய்யும் புகுவாயில் மாளிகையின் சாள ரத்துத் தாவுமெழிற் கொடியொன்று கொழுகொம் பின்றித்

தனியாக அசைந்தாடி நீர்பி லிற்றக் கூவிழந்து குயிலங்கே தேம்பக் கண்டேன்

கோலமயில் ஆடாமல் நிற்கக் கண்டேன்.

மலர்முழுதும் செடிகொடியில் வெதும்பக் கண்டேன்

மணம்பரப்பும் அம்மலரைக் கொய்வாரில்லை; புலர்பொழுதிற் புல்லென்ற முன்றில் கண்டேன்

பூங்கொடியார் இடுகின்ற கோலம் இல்லை; பொலிவிழந்து நெடுங்கதவம் நிற்கக் கண்டேன்

புதியரென விருந்தயர வருவாரில்லை; பலவகைய புள்ளினமும் வாடக் கண்டேன்

பழந்தந்து பால்தந்து புரப்பாரில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/28&oldid=571635" இலிருந்து மீள்விக்கப்பட்டது