பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 9 தமிழ் முழக்கம் 0.

மேதகுநல் முதுபார்ப்பான் மறையுணர்த்த

மேவுமழல் வலஞ்செய்து மணந்து கொண்டும்

காதலெனுங் கடல்மூழ்கி நின்றும் அந்தக்

கடல்தனிலே முத்தொன்றும் கண்டா ளல்லள்.

ஆதலினால் பிரிவென்னுங் கொடிய பாவி

அவட்களித்த பெருந்துயரம் தணிக்கும் ஆற்றை ஏதொன்றும் அறியாளாய் இரங்கி நெஞ்சை

இடருக்கே அளித்துவிட்டாள். கோவ லற்கு மாதவிபோல் எழுதவிலை முடங்க லொன்றும்

மனத்தகத்தே குமுறலெலாம் எழுதி வைத்தாள்; தீதறியா அன்னையிவள் பிரிவுத் துன்பம்

செப்புதற்கு முயல்வமெனின் இயல்வ தொன்றோ?

காதலரைப் பிரிந்தமையால் வருந்தும் மாதர்

கண்சிவந்து வெகுண்டிருப்பார்; அதுதணிக்கும்

சூதறிந்த ஆடவர்தாம் விருந்தாய் வந்தார்

துணையுடனே இற்புகுதச் சிவப்பு மாறி

மாதர்விழி கருங்குவளை நிறமே எய்தும்; --

மனக்குறிப்பைக் கருப்புடனே சிவப்புக் காட்டும்;

கோதறியா இவள்விழியோ சிவக்க வில்லை

| つ ೧೬೧ಾಣ புனலோடு கருமை காட்டும்.

உயிரனைய தேவந்தி என்னுந் தோழி

உளமுருகிக் கண்ணகிபால் வந்து நின்று.

"செயிரறுநீர்க் குண்டங்கள் இரண்டுள் மூழ்கிச்

சிந்தையினால் காமனைநாம் வணங்கி நின்றால்

துயரொன்றும் அணுகாமல் இன்பம் மேவித்

துணையுடனே வாழ்வுவரும்' என்றா ளாக,

15

16

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/33&oldid=571640" இலிருந்து மீள்விக்கப்பட்டது