பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 * தமிழ் முழக்கம் 9

ஆவி துடித்தாள் அலறிப் புலம்பியவள் போர்க்களத்தை நோக்கிப் புறப்பட்டாள் வாளெடுத்து: பார்த்தலத்தை மூடியபோல் பற்பலரின் மெய்கிடக்கக் கண்டாள் அவண்கிடந்த கட்டிளமைக் காளையரின் புண்தாழ் குருதியுடல் ஒவ்வொன்றும் போய்ப்பார்த்தாள். 50 கைவிரல்கள் வேல்பிடிக்கக் கண்ணிமைகள் தாம்மலர மெய்குருதி நீர்வடிக்க மேலவன்றன் மார்பகத்தே பாய்ந்ததொரு கூர்வேல் பளிச்சிட்டுத் தானிற்கச் சாய்ந்ததிரு வாய்மகனைத் தாமரையைப் போல்முகனை வெற்றிப்புன் மூரலொடு வீழ்ந்து கிடந்தானைப் பற்றிப் பலமுறையும் பார்த்தாள் விழிமல்க ஈன்றெடுத்த ஞான்றையினும் எல்லையிலாப் பேருவகை ஏன்றுளத்தாற் பூரித்தாள்; எம்மன்னை வாழியரோ வெங்கொடுமைச் சாக்காட்டை வீர விளையாட்டென் றெங்கள்குலம் எண்ணும் இயல்பினது போர்ப்பரணி 60 பாடி மகிழும் பரம்பரையேம்; வாகைமலர் சூடி வருகின்ற தொல்குடியேம்; ஏந்தியநற் கைவேல் களிற்றொடு போக்கி வரும்போதும் மெய்வேல் பறித்தெடுத்து மேலேறிப் பாய்ந்திடுவோம்; போரில் விழுப்புண் படாஅத நாளெல்லாம் சீரில்லா நாளென்று செப்புந் திறலுடையேம்; ஆற்றல் மிகவிருந்தும் அஞ்சாத நெஞ்சிருந்தும் கூற்றம் எனவெகுளும் கோவேந்தர் ஆண்டிருந்தும் தூற்றும் படியானோம் தொண்டடிமையாகிவிட்டோம் ஏற்றம் தனையிழந்தோம் ஏதிலர்க் காளானோம்; 70 வேலில்லை வாளில்லை வெட்டில்லை குத்தில்லை கோலில்லை கொற்றக் குடையில்லை ஆயினுமே வந்து புகுந்தவர்கள் வாணிகத்தின் பேர்சொல்லித் தந்திரத்தால் நம்நாட்டைத் தட்டிப் பறித்தார்கள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/41&oldid=571648" இலிருந்து மீள்விக்கப்பட்டது