பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 கவியரசர் முடியரசன் 0 43

வெள்ளை மனத்தினர்.நாம் வெள்ளை நிறத்தவர்க்குக் கொள்ளையடிக்கக் கொடுத்துவிட்டோம் நம்நாட்டை செல்வம் பறிபோகச் சீரிழந்து நாடிழந் தல்லும் பகலும் அடிமைகளாய் நொந்துழன்றோம்; குற்றம் புரிந்திங்குக் கோலேந்தும் மாற்றாரைச் செற்றம் மிகக்கொண்டு சீறிப்பகைத்தெழுந்தோம்: 80 ஆண்ட கொடுங்கோலர் ஆணவத்தாற் செய்தவெலாம் மீண்டும் நினைத்துவிடின் மெய்சிலிர்க்கும் கண்சிவக்கும்; வாட்டுஞ் சிறையெனினும் வாட்டம் அடையவிலை, வேட்டு, துளைத்தாலும் வீரம் அடங்கவிலல், நாட்டை நினைந்ததனால் நம்முரிமை வேட்டதனால் வீட்டை மறந்தோம் விடுதலைக்கே பாடுபட்டோம்: அந்நாளில் நம்மவர்கள் ஆற்றிய நற்றொண்டால் இந்நாள் உரிமையினை ஏற்று மகிழ்கின்றோம்; அஞ்சாமல் துஞ்சாமல் ஆர்த்தெழுந்த போர்வீரம் எஞ்சாமல் நின்றிருக்க இன்றதனைப் பாடுவம்நாம்: 90 செந்தமிழை நம்முயிரைச் சீர்கொண்டதாய்மொழியை எந்தமொழி தன்னாலும் ஏங்க விடுவதில்லை; ஆட்சி மொழியுரிமை அன்னை மொழிக்கானால் மாட்சி நமக்காகும் என்றெழுந்த மாணவரைச் சுட்டழித்த போதும் துளங்காமல் நின்றிருந்து கட்டிளமைக் காளையர்கள் காட்டியநல் வீரத்தைப் பாடாமல் விட்டுவிடப் பாவலரால் ஒல்லுவதோ? பாடாமல் நாவெதற்குப் பாவெதற்குப் பாடுவம்நாம்; மேன்மைத் தமிழ்காக்க மேலெல்லாந் தீயூட்டி ஆண்மைத் திறமுரைத்த ஆடவரைப் பாடுவம் நாம்: 100 இவ்வனைய வீரத்தின் ஏற்றத்தைப் பாடுவதால் செவ்வியநன்னெஞ்சத்தில் சிந்தா உரமேறும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/42&oldid=571649" இலிருந்து மீள்விக்கப்பட்டது