பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 9 தமிழ் முழக்கம் 9

சீனத்த ரானாலும் செந்நெறிசெல் லாப்பாகித் தானத்த ரானாலும் தண்டெடுத்துப் போர்முடிப்போம்; காளைப் பருவத்தீர் காய்ந்தெழுதல் நிம்கடனாம் \ 奥 நாளைத் திருநாட்டின் நாயகங்கள் நீவிரன்றோ? வீரம் மறவாதீர் வேற்றவர்தாம் நம்நாட்டின் ஒரம் புகுதற்கும் ஒவ்வாதீர், காவலர் நீர்; நீதமிலார் தக்கஒரு நேரமெதிர் பார்க்கின்றார் பேதலித்து நம்முள்ளே பேதம் விளைக்காதீர்; 110 செந்நீருங் கண்ணிருஞ் சிந்தி வளர்த்தபயிர் புன்னிர்மை கொண்டோரால் போயொழியப் பார்ப்பதுவோ? நாமிருக்கும் நாடு நமதன்றோ? வேற்றவர்தாம் பூமியினை ஆண்டிருக்கப் புல்லடிமை ஆவதுவோ? ஆளப் பிறந்தவர்கள் ஆளடிமை செய்வதுவோ? நாளைப் பிறப்பவர்கள் நம்மையன்றோ தூற்றிடுவர்; வேங்கைப் புலிக்கூட்டம் வீரத் திருக்கூட்டம் நீங்கள் என அறிவேன்; நேரார்தாம் இந்நாட்டில் காலெடுத்து வைத்தால் உடலங்கள் காலாகும்; வாலடக்கி வந்த வழிதிரும்பும் என்றுரைத்தால் 120 போரெடுத்து வந்திருக்கும் புல்லியர் ஒர்நொடியில் மாரடைத்துச் சாகாரோ? 'மான மறவர்யாம், எம்முரிமை தீண்டுவரேல் எம்முயிர்கள் வெல்லமல்ல, எம்முனையும் துச்சமென எள்ளி நகைத்திடுவோம்' என்றெழுக காளையர்காள். ஏது தடைபடைகள்? நன்று புரிந்திடுக நாடு தழைத்திடுக; ஒன்றிவரும் நல்லுணர்வால் உம்பால் உரைக்கின்றேன் நின்றுபணி செய்வீர் நிமிர்ந்து.

& *、*ー காதர்முகைதீன் கல்லூரி

so so = | H -- a o அதிராம்பட்டினம்

o 5.12.1965

தண்டெடுத்து - படையெடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/43&oldid=571650" இலிருந்து மீள்விக்கப்பட்டது