பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீரின் பெருமை

கலிவெண்பா

பூதங்கள் ஐந்தாலும் பூத்ததுதான் இவ்வுலகம் வேதங்கள் மற்றுள்ள விஞ்ஞான நூல்களெலாம் ஒதுகின்ற உண்மையிதே ஒதுமோர் ஐந்தனுள் தீதகன்ற நானும் திகழ்கின்றேன்; என்னைத்தான் நீரென்று பேர்குறிப்பர் நீணிலத்தார்; பாருக்கு வேரென்று சொல்லி வியந்துரைக்கத் தக்கவன்யான் நீரின் றமையாதுலகமெனக் கூறியபின் வேறென்ன சான்று விளம்புதற் கீங்குளது? பற்பலவாம் நற்பண்பு பாரில் எனைப்போலக் கற்றவரைக் கண்டதிலை காணுங்கள் என்பண்பை: 10 காவிற் செழித்தஒரு கான்முல்லை கொம்பின்றித் தாவிப் படர்தற்குத் தள்ளாடும் வேளைதனில் காரோட்டும் கையுடையான் கண்டுமனம் நைந்துருகித் தேர்காட்டிச் சென்றானோர் தென்னாட்டான் வேள்பாரி; கூடிவருங் கார்முகில்கள் கொட்டும் மழைநனைக்க ஆடிவரும் மாமயிலுக் காடைகொடுத் தான்பேகன், நாட்டுக் குரியவன்தான் காட்டுக்குச் சென்றாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/44&oldid=571651" இலிருந்து மீள்விக்கப்பட்டது