பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 * தமிழ் முழக்கம் 9

முற்றும் உடுக்கணமாய் அங்கே முகிழ்த்தனவோ? கட்டுப்பா டில்லாத காலத்தே இவ்விருவர் கட்டுப்பட் டில்லறங் கண்டமையால் தம்வாழ்வில் எண்ணில்லாப் பிள்ளைகளை ஈன்றனரோ? அம்மக்கள் விண்ணிற் றிரிந்து விளையாடுங் காட்சியைத்தான் மண்ணகத்து மாந்தர் உடுவென்று மாற்றினரோ? கண்பட்டு விட்டதென்பார் காதுக்குட் சொல்கின்றேன்; 80 எத்துணைதான் இன்பம் இழைந்திழைந்து வாழ்ந்தாலும் ஒத்தமனங்கொண்டிங் குயர்வுடனே வாழ்ந்தாலும் ஒன்றிரண்டு பூசல் உறுவ தியல்பாகும்: கன்றிமனங் காய்ந்து கழறுவதும் அவ்வியல்பே; வாழுங் குடும்ப வழக்குக்கு வானத்துச் சூழுங் குடும்பமும் சொல்லுங்கால் தப்பாது: வானக் குடும்பத்தில் வாய்த்ததொரு பூசலினால் தானந்தக் கூக்குரலோ? தையல் பெருங்குரலோ? செங்கதிரோன் றன்குரலோ? செவ்விதிற் கேட்கவிலை; பொங்கும் இடியென்று பூசி மெழுகுகின்றார்: 90 வீட்டில் நடப்பதெலாம் வேற்றார் தெரியாமல் பூட்டி மறைப்பதுதான் போற்றுங் குடும்பமென்பர் வாழ்ந்து வருநாளில் வான்மகள்தன் மெய்யொளியிற் றாழ்ந்து மெலிந்து தளர்ந்து நடைபயின்றாள்; கண்பட்டுப் போகக் கணக்கில் மகப்பெற்றாள் புண்பட்டாள் துன்புற்றாள் பொன்மேனி வாடிவர

நோயிற் பிணிப்புண்டாள். நுண்ணிடைபோல் தேய்ந்தழகுச் சாயல் இழந்திழந்து சாய்ந்தே மறைந்துவிட்டாள். காதற் கணவன் கதிரோன் மனமுடைந்து, 'சாதல் உறுமகளே சாய்வதற்கோ தேய்ந்தனைநீ? 100 நீளுலகில் என்றும் நிலைத்துநிலாப் பெண்மணியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/63&oldid=571669" இலிருந்து மீள்விக்கப்பட்டது