பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 கவியரசர் முடியரசன் 0

65

பாழுலகோர் நெஞ்சிற் பரிவுடனே நின்னை நிலவுநில வென்றுரைப்பர் நீயென்ன செய்வாய்! நிலையாமை காட்டினைநீ; நெஞ்சத்துப் புக்கவளே, நாளை பிறப்பாயோ? நான்மகிழ வாராயோ? தோளைப் புணர்ந்தின்பச் சொல்லமுது தாரோயோ?" என்றெல்லா மேங்கி இரங்கிப் புலம்பிக்கண் கன்றும் படியாகக் கண்ணிர் சொரிந்திருந்தான்; விண்ணிற் கதிரோன் விடுத்தகண் ணிரினைத்தான் மண்ணில் இருப்போர் மழையென்று கொண்டனரோ? இன்பமுடன் துன்பம் இணைந்ததுதான் வாழ்க்கைஎன மன்பதையோர் எண்ணி மனங்கொண்டு வாழ்வாரேல் நல்ல குடும்பம் நடத்தி மகிழ்ந்திடலாம். அல்லல் சிறிதுமிலை யாம்.

110

தமிழ் இலக்கியப் பெருமன்றம்

இராசிபுரம்

25.9.1966

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/64&oldid=571670" இலிருந்து மீள்விக்கப்பட்டது