பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 கவியரசர் முடியரசன் 0 67

காதருகில் வந்ததனைக் காட்டித் திருமகனே, ஞாலமெலாந் தேமதுர நல்லோசை கேட்டிடவே கோலமிகு மாநாடு கூட்டிக் களிக்கின்றார்; 2O வந்துவெளி நாட்டார் வணக்கஞ் செலுத்துகிற

அந்தத் திருநாளில் ஆர்த்துவருங் கூட்டமடா: என்றன் புகழ்காக்க ஈடில்லாப் பேருழைப்பை அன்று கொடுத்துயர்ந்த அன்புமிகு சான்றோர்க்கு - அலையெழுப்பும் ஆழி அடைகரையில் நல்ல சிலையெழுப்பிப் போற்றுஞ் சிறப்பனைத்துங் காணுதிநீ: யாதும்நம் ஊராக யாவரும்நம் கேளிரென o

ஒதும் மொழியால் உலகந் திரண்டதைப்பார்: மண்ணில் தரைதெரிய மாட்டா தணிவகுத்துக் கண்ணைக் கவர்ந்து கருத்தை மகிழ்விக்க 30 ஊர்ந்துவரும் ஊர்வலத்தில் உள்ளக் கிளர்ச்சியுடன் சேர்ந்துவரும் மக்கள் செறிந்திருக்குங் காட்சியடா; நீண்டதுதிக் கையை நிமிர்த்துப் பெருங்களிறு - ஆண்டு நடந்துவர அக்களிற்றைப் பின்தொடர்ந்து காவடிகள் நல்ல கரகங்கள் ஆடிவரப் பூவடியர் நாட்டுப் புறமாதர் போலழகுப் பாவையர்கள் ஆடிவரும் பாங்கெல்லாம் இங்கேகாண்; யாவையுமுன் கண்ணால் அழகுறவே காணங்கே: நாட்டின் பழங்கருவி நாத சுரக்கருவிப் பாட்டின் ஒலிகேட்டுப் பாடுகநீ பாவலனே 40 வண்ண்க் கொடிபிடித்து வஞ்சியருங் காளையரும் நண்ணிப் படர்கின்ற நல்லழகைப் பாரங்கே: கட்டழகுப் பெண்மகளிர் காலிற் சதங்கைகட்டி இட்டடிகள் மாறா தெடுத்தாடும் நாட்டியங்காண்; எப்படையும் இப்படைக் கீடில்லை என்றுரைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/66&oldid=571672" இலிருந்து மீள்விக்கப்பட்டது