பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 9 தமிழ் முழக்கம் 0.

முப்படையாய் மொய்த்திங்கு முன்னேறும் வீரரைப்பார்; செந்தமிழைக் காக்குஞ் சிறப்புடைய வேற்குமணன் வந்தஒரு பாவலர்க்கு வாய்த்த தலைகொடுக்க வாளெடுத்த வள்ளல் வடிவத்தைக் காட்டுமிந்த நாளெடுத்த ஊர்வலத்தை நாட்டமொடு கண்டிடுநீ; 5O அவ்வை நெடிதிருப்பின் அன்னைமொழி வாழுமெனச் செவ்வை மனமுடையான் சீரதியன் நெல்லிக் கனிகொடுத்த காட்சியிலே காட்டும் பணிவை இனிதெடுத்து வந்த எழிலெல்லாம் பார்மகனே == வார்முரசு கட்டிலிலே வந்து துயில்ரீன்ற /* சீர்வரிசைப் பாவலர்க்குச் செங்கோல் அரசனங்கு நின்றிருந்து வெண்கவரி நீள்கையால் வீசுகிற அன்றிருந்த காட்சி அழகெல்லாங் காண்மகனே! பாவேந்தர் தம்மைப் பணிந்து மதித்துவந்த பூவேந்தர் ஆண்டிருந்த பொற்காலம் அக்காலம்: 60 மீண்டுமொரு பொற்காலம் மீளத் திருவுளத்துப் பூண்டெழுந்த என்மகனே போராட்டப் பாட்டெழுது: ஆளும் பொறுப்பேற்றோர் ஆட்சி பிழைத்துவிடின் வாழுமொரு பெண்ணும் வழக்குரைத்து நீதிபெறும் நாடடா ஈதென்று நாளெல்லாஞ் சொல்பவளைப் பாடடா கண்ணகியைப் பாரடா முன்னைப் புறங்காட்டும் வீரர் புறங்காட்டாப் போரின் திறங்காட்டி நிற்கின்ற தீரத்தைக் காட்டுகின்ற y^ கோட்டைப்போர்க் காட்சியினைக் கூர்ந்து மனத்திருத்தி السلام நாட்டுக்கோர் பாட்டெழுதி நல்கி மகிழ்ந்திடுநீ; 7O போரெடுத்துச் சென்ற புகல்களிற்றைப் பூட்டிநெற் போரடித்த காட்சிப் பொலிவினையும் இங்கேகாண்;

பண்டைப் புகார்நகரில் பண்டங்கள் கொண்டுசெல

புறம்காட்டும் - புறநானூறுகாட்டுகின்ற.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/67&oldid=571673" இலிருந்து மீள்விக்கப்பட்டது