பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கவியரசர் முடியரசன் 0 75

வாணிகத்தார் என்றன் வளர்புகழைக் கொல்கின்றார்; 130 ஊறவைத்து நாறவைத்து - ஊரெல்லாம் எற்பழித்துக் கூறவைத்த அந்தக் கொடுமைக்கோர் எல்லையுண்டா? நாட்டில் நடக்கவிட நாடாமல் எங்கெங்கோ போட்டுப் பதுக்குகின்றார் போலிக் கயவரெனைக் கண்டகண்ட திக்கிற் கடத்திக் கொடுபோகும் தொண்டர்களைக் காணுங்கால் துவென்றுமிழிரோ? நாட்டு நலங்கருதும் நான்வாழும் நன்னிலத்தைக் கேட்டுக் குணம்படைத்துக் கீழ்வாழை செங்கரும்பு கூடிக் கவர்வதற்கோர் கொள்கை வகுத்திடுமேல் வேடிக்கை பார்க்க விழைவேனோ? என்னையிங்கு 140 வாழ விடுங்கள் வளர விடுங்களெனத் தாழ உரைத்திடுவேன் தாண்டிவரின் போர்தொடுப்பேன் மக்கள் பொதுவாழ்வு மங்கலமாய்ப் பொங்கிவரத் தக்க வழிசெய்து தன்னாட்சி ஓங்கிடவே எண்ணி உழைத்திடுவேன் என்பனிக்கு நற்றுணையாய் நண்ணி வருவீர் நயந்து. _

--- பொங்கல் விழா -திருச்சி வானொலிநிலையம் 14.1. 1968

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/74&oldid=571680" இலிருந்து மீள்விக்கப்பட்டது