3 கவியரசர் முடியரசன் 8 77
மாடங்கள், கூடங்கள் தோன்றா முன்னர்
மக்களுக்குக் கல்விதனைப் புகட்டு தற்குப் பாடங்கள் அறிவுறுத்தித் தந்த தெல்லாம்
படர்ந்துவளர் மரத்தடிதான் எழுதி வைத்த ஏடந்த மரந்தந்த பிச்சை யன்றோ?
எழுத்துணர்த்தும் ஆசானும் வாழ்ந்த சிற்றில் ஒடறிந்த துண்டோஅம் மரமே தந்த
ஒலைகளே மேற்பரப்பை அழகு செய்யும். 3
கல்லடிகள் பட்டாலும், தலையில் ஏறிக்
காலடிகள் வைத்தாலும், கழிகள் கொண்டு வல்லமையின் எறிந்தாலும் பொறுமை மேவி,
வாய்திறந்து பேசாமல் கனிகள் நல்கி நல்லபயன் செய்துவரும் மரங்களெல்லாம்
நாட்டுக்கோர் நீதிதனை நவின்று நிற்கும்; செல்வமிகப் பெற்றவர்கள் மற்ற வர்க்குஞ்
செய்திடுக ஒப்புரவென் றுணர்த்திக் காட்டும். 4.
வேர்கொடுக்கும், பால்கொடுக்கும், வெட்டுவோர்க்கு
மேற்பட்டை கொடுத்திருக்கும், பற்றும் நோயின் வேர்கெடுக்கக் காய்கொடுக்கும், பூக்கொடுக்கும்,
விளைந்துவருங் கனிகொடுக்கும், இலைகொ டுக்கும்; 'ஆர்கொடுக்க வல்லார்கள் என்னைப் போலென்
றருமருந்து மரமொன்று நிமிர்ந்திருக்கும்: பேர்படைத்த செல்வரெலாம் பிறரும் வாழப்
பெருந்துன்பம் உறும்போதும் வழங்கச் சொல்லும். 5