78 * தமிழ் முழக்கம் 9
படரஒரு வழியின்றி மயங்கி நிற்கும்
பைங்கொடிகள் தழுவுதற்கும் இடங்கொடுக்கும்: படபடனெச் சிறகடித்துப் பறந்து சுற்றும்
பறவையினங் தங்குதற்குங் கைகொடுக்கும்: உடலினையும் சிலபறவை ஒட்டை செய்தே
உறைவிடமாக் கொண்டிருக்க உவந்த ரிக்கும்; மடமடடெனச் சாய்கின்ற நிலைவந்தாலும்
மங்கையர்கள் அடுப்பெரிக்க விறகு நல்கும். 6
காட்டுமரம் என்றாலும் மீனவர்க்குக்
கட்டுமர மாகி,அது கடலில் ஒடும்: நாட்டரசன் கையகத்துச் செங்கோ லாகி
நல்லாட்சி புரிகின்ற குறியைக் காட்டும்; கேட்டுணரும் மாணவரை முறைப்படுத்தக்
கேள்விமிகும் ஆசான்கைக் கோலாய் நிற்கும்; வீட்டகத்தே தூணாகிப் பிறவும் ஆகி
விளைக்கின்ற பயனெல்லாம் விளம்பப் போமோ? 7
இடுக்கண்கள் பலவாகிச் சூழ்ந்த போதும்
இயல்பொன்றுங் கெடுதலிலாச் சான்றோர் போல அடுத்தடுத்துத் தேய்த்தாலும் சிறிது கூட
அதற்குரிய மணங்குன்றா மரங்க ளுண்டு; படுக்கின்ற நிலையுற்ற பெற்றோர் தம்மைப்
பரிவுடனே தாங்குகிற மக்கள் போல, விடுக்கின்ற வேர்சிதைந்து முதிர்ந்த காலை
விழுதுகளால் தாங்குகிற மரங்க ளுண்டு. 8