பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 கவியரசர் முடியரசன் 0 87

படியரிசித் திட்டங்கள் அங்கே யில்லை

படிமுழுதும் நெல்விளைந்து கிடப்பதாலே; குடிபுரப்போர் உழமறுப்புச் செய்ய வில்லை

கொடுமைகளைக் காணாத கார ணத்தால்; இடுவரம்புச் சட்டங்கள் அங்கே இல்லை

எழில்வயல்கள் உழவரிடம் இருப்பதாலே; படுபொருளைப் பதுக்குகிற பழக்கம் இல்லை

பார்முழுதும் நினைத்தவெலாம் கிடைப்பதாலே. 15

உரம்போடத் தழையறுப்பர் அன்றி மற்றோர்

உயிர்போகத் தலையறுக்குந் தொழிலைச் செய்யார்: தரங்காணும் பயிரறுப்பர் அன்றி மற்றோர்

தவிதவிக்க உயிரறுக்க நினையார் அங்கே: வரம்பாடும் களையெடுப்பர் அன்றி மற்றோர்

வரம்புகளை எடுக்கமனம் விரும்பார் அங்கே; அறம்பாடுஞ் செயல்முறைகள் விளைப்ப ரன்றி

அறம்பாடும் தீவினைகள் விளையா ரங்கே. 16

பலவகைய தொழில்வளங்கள் படைத்து நிற்பார்

பணிபுரியும் நிறுவனங்கள் அடைத்து நில்லார்; உலகுடனே தலைநிமிர உழைத்து நிற்பார்

உண்டாக்கும் பொருள்தடுத்து வளைத்து நில்லார்; கலகமொடு கயமைசெய விருப்பங் கொள்ளார்

கடமைகளைப் புரிவதற்கு வெறுப்புங் கொள்ளார்; பலதொழில்கள் புரிவினைஞர் பகைமை கொள்ளார்

பாடுபடும் நிலைக்கேற்பப் பயனே கொள்வார். 17

அறம்பாடும் - 1. அறநூலிற்பாடும் , 2. வசைபாடுதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/86&oldid=571692" இலிருந்து மீள்விக்கப்பட்டது