0 கவியரசர் முடியரசன் 0 87
படியரிசித் திட்டங்கள் அங்கே யில்லை
படிமுழுதும் நெல்விளைந்து கிடப்பதாலே; குடிபுரப்போர் உழமறுப்புச் செய்ய வில்லை
கொடுமைகளைக் காணாத கார ணத்தால்; இடுவரம்புச் சட்டங்கள் அங்கே இல்லை
எழில்வயல்கள் உழவரிடம் இருப்பதாலே; படுபொருளைப் பதுக்குகிற பழக்கம் இல்லை
பார்முழுதும் நினைத்தவெலாம் கிடைப்பதாலே. 15
உரம்போடத் தழையறுப்பர் அன்றி மற்றோர்
உயிர்போகத் தலையறுக்குந் தொழிலைச் செய்யார்: தரங்காணும் பயிரறுப்பர் அன்றி மற்றோர்
தவிதவிக்க உயிரறுக்க நினையார் அங்கே: வரம்பாடும் களையெடுப்பர் அன்றி மற்றோர்
வரம்புகளை எடுக்கமனம் விரும்பார் அங்கே; அறம்பாடுஞ் செயல்முறைகள் விளைப்ப ரன்றி
அறம்பாடும் தீவினைகள் விளையா ரங்கே. 16
பலவகைய தொழில்வளங்கள் படைத்து நிற்பார்
பணிபுரியும் நிறுவனங்கள் அடைத்து நில்லார்; உலகுடனே தலைநிமிர உழைத்து நிற்பார்
உண்டாக்கும் பொருள்தடுத்து வளைத்து நில்லார்; கலகமொடு கயமைசெய விருப்பங் கொள்ளார்
கடமைகளைப் புரிவதற்கு வெறுப்புங் கொள்ளார்; பலதொழில்கள் புரிவினைஞர் பகைமை கொள்ளார்
பாடுபடும் நிலைக்கேற்பப் பயனே கொள்வார். 17
அறம்பாடும் - 1. அறநூலிற்பாடும் , 2. வசைபாடுதல்.