86 9 தமிழ் முழக்கம் 9
குழலிசையும் யாழிசையும் எழுப்பும் ஓசை
குயிலிசையை வண்டிசையை விஞ்சி நிற்கும்; முழவுவகைத் தோற்கருவி தனித்தும் சேர்ந்தும்
முழங்குகிற பேரொலிகள் இடியை விஞ்சும்: பழகுமவர் மிடற்றெழுந்த பாடல் தந்த
பண்ணெல்லாம் தெளிதேனை விஞ்சி நிற்கும்; அழகொழுகும் இடைமடவார் அரங்கம் ஏறி
ஆடுகின்ற எழில்கண்டு மயில்கள் சோரும். 12
கலையுடுத்துக் குழலிசைக்கத் தாளங் காத்துக்
கைவழியே விழிசெலுத்தும் நடனங் கண்டேன்; கலைவிடுத்துக் குழல்விரித்து மானம் விட்டுக்
காசொன்றே குறியென்று பிறந்த மேனி நிலைபடைத்துச் சூடுண்ட மண்புழுப்போல்
நெளிந்துகுதித் தாடுகின்ற பேய்கள் இல்லை; நிலைகெடுத்த கலைகெடுத்த பரணிப் பேய்கள்
நெளிவினுக்குக் கலையின்பேர் சூட்ட வில்லை. 13
பண்ணுடனே திறமனைத்தும் உணர்ந்த வல்லோர்
பாட்டரங்கில் தமிழிசையே முழங்கக் கேட்டேன்; கண்ணறவக் களிப்பினிலும் பாணர் தம்வாய்
கன்னிமொழித் தமிழிசையே பாடக் கேட்டேன்; எண்ணமெனக் கெங்கெங்கோ ஒடி ஒடி
எனதுதமிழ் நாட்டுநிலை நினைந்த தங்கே: நண்ணிஎனைத் தோள்தொட்டுக் கம்ப நாடன்
நலமிக்க வேளாண்மை காண்க என்றான். 14
H. h ." - கணனறவம - களநறவம