90 * தமிழ் முழக்கம் 9
பாரதியார் வழங்குகொடை யாக வந்த
பாவேந்தன் பாரதிக்குத் தாசன் என்பான் சீரறியார் யாருள்ளார்? அந்த வள்ளல்
சிறிதளித்த கொடையாலே கவிஞர் ஆகி ஊரறிய நாடறிய வாழ்வு பெற்றோர்
ஒருநூற்றின் மேலாக விளங்கு கின்றார்: கூரறிவுப் பாவேந்தன் எனையும் ஈங்குக்
கொடையாக வழங்கியுளான் நாட்டுக் காக. 3
துறைதோறும் துறைதோறும் தீங்கு செய்து
தூயதமிழ்ப் பண்பாட்டை மாற்றி விட்டு, மறைவாக நமக்குள்ளே பிளவுண் டாக்கி
வஞ்சனையால் சூழ்ச்சியினால் வாழ்வு பெற்ற கறைசேரும் ஆரியமாம் காரி ருட்டைக்
கடிதினிலே வெருண்டோடச் செய்து, மீண்டும் நிறைவான தமிழ்வாழ்வு மிளிர வேண்டி
நீள்துயிலை நீக்கஎழும் கதிரோன் போல்வான். 4
வஞ்சத்தை ஒருசிறிதும் அறிய மாட்டான்
மற்றவர்தம் உயர்வுக்குப் புழுங்க மாட்டான். நெஞ்சத்தைத் தமிழ்மொழிக்கே தந்த தாலே
நினைக்கின்ற தன்கருத்தை மறைக்க மாட்டான். அஞ்சித்தன் னுளக்கருத்தைக் குறைக்க மாட்டான், அதுவருமே இதுவருமே எனநடுங்கிக் கெஞ்சித்தன் பெருமிதத்தைச் சிதைக்க மாட்டான்
கிளர்ந்துவரும் அரியேற்றின் தோற்றங் கொண்டான். 5