பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 7

பாரதி பொழிந்த மழை

எண்சீர் விருத்தம்

'காலதனால் உனைமிதிப்பேன் காலா வாடா

கவியிதனில் இடிமுழக்கம் ஒலிக்கக் கேட்டேன்; நூலமரும் நெஞ்சத்தில், நுவலும் வாக்கில்

நுடங்காத உண்மையொளி மின்னக் கண்டேன்; கோலமிகு வெள்ளத்தின் பெருக்கைப் போலக்

கொடுத்தகவிப் பெருக்கத்தில், உணர்ச்சிப் பாங்கில் ஞாலமிசைத் தெள்ளுதமிழ் மழையைக் கண்டேன்

Prpಣಣಣ நனைந்தெழுந்து பாடு கின்றேன். 1

வள்ளுவனும் இளங்கோவும் மற்று முள்ளோர்

வகுத்தமைத்த நூற்கடலுள் தவழ்ந்த மேகம்: உள்ளெழுந்த உணர்ச்சிஎனும் பெருங்காற் றுந்த

உயர்ந்தெழுந்து கற்பனைவான் திரிந்த மேகம், துள்ளிவருஞ் சொற்களெனும் இடிமுழக்கித்

தூயதமிழ்ப் பார்வையினால் மின்னும் மேகம், கள்ளுமிழும் கவிப்பயிர்கள் செழிக்க வேண்டிக்

கருக்கொண்டு தமிழ்மழையைப் பொழிந்த மேகம். 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/97&oldid=571703" இலிருந்து மீள்விக்கப்பட்டது