உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243

243 பதற்கா, எத்தகைய கஷ்ட நஷ்டமும் ஏற்கும் துணிவு கொண்ட உள்ளம் படைத்தவர்கள் நாஞ்சில் பகுதியில் நமது கழகத்தில் ஏராளமாக உள்ளனர் என்று மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தேன்--இப்போது இதற்கான ஆர்வம் கொண்ட தமிழர்கள் மலையில் மட்டுமல்ல, அதைத்தொட்டுக்கொண்டும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டும் உள்ள பெரியகுளம் தாலுக்கா முழுவதிலும் ஏராளமாக உள்ளனர் என்பதைத் தெரிந்து கொண்டேன். மலை அடிவாரமாக உள்ள கூடலூர், ஓர் நல்ல பாசறை. கம்பம் -- தேவாரம் - கோம்பை - போடி பெரியகுளம் -இங்கெல்லாம், நமது கழகம் மிக வலிவும் பொலிவும் கொண்டதாக இருக்கிறது. பொதுவாகவே பெரியகுளம் வட்டாரத்தினர், மலை மீதுள்ள ஏலத் தோட்டங் களின் உரிமையாளர்கள் - அந்த வட்டாரத்து வாழ்க்கைத் தரமே, மலையில் அவர்களுக்கு உள்ள தொடர்பைப் பொறுத் துத் தான் இருக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள பெரும் செல் வர்கள், காமராஜர் தமது பாதுகாப்பாளர் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்! ஆனால், தேவிகுளம் பீர்மேடு பகுதி களுக்கான கிளர்ச்சிக்கு வீரர்கள்-தியாகிகள்-அஞ்சா நெஞ் சுடன் அறப்போரில் ஈடுபடவல்லோர் தேவைப்படும்போது, நமது கழகம்தான், பணியாற்ற முடியும். வாய்ச்சொல் அருள வும், வழிவகை கூறவும் தலைவர்கள் பிறமுகாம்களில் கிடைக் கக்கூடும். ஆனால், காரியமாற்றவும் கடும் கிளர்ச்சிகளில் ஈடு படவும், கழகம்தான் முன்வரவேண்டிய வாய்ப்புப்பெற்றிருக் கிறது. மலைமீதுள்ள தமிழ்த் தோழர்களிடம் நாம் பெறக் கூடிய ஆதரவினைவிட, அளவிலும் வகையிலும் அதிகமான அளவு பெரியகுளம் வட்டாரத்திலே திரட்ட இயலும் - திரட் டிட வேண்டிய நிலைமைதான் ஏற்படும். ஒன்று மட்டும் முன்கூட்டியே தெரிந்துகொள்வது, களம் அமைக்க பெரிதும் உதவக்கூடியது என்று எண்ணுகிறேன்- திருவிதாங்கூர்சர்க்கார்எளிதில் இடமளிக்காது-இணங்காது!- தமிழரின் உரிமையைப் பறிப்பது அறமாகாது என்று கருதும் நேர்மை மலையாள நாட்டு தலைவர்களில் ஒருவருக்கும் இருப்ப தாகத் தெரியவில்லை - தமிழர்களைக் கூலிகள் - பிழைக்கவந்தவர் கள் - அன்னியர்கள்- என்று மலையாளிகள்கருதும்படி - (ஏசும்படி மட்டுமல்ல) பலமான பிரச்சாரம் நடைபெற்றிருப்பதுடன், விளைவுபற்றி எண்ணிப்பாராமலேயே வீரத்தை வீம்பாக்கிப் பேசிடும் வித்தகர் சிலரால், தமிழர் - மலையாளி மனமாச்சரி யம், கொழுந்துவிட்டெரியும் நிலையும் இருக்கிறது-இதனை மறைத்தும் பயனில்லை - குறைத்து மதிப்பிடுவதும் தவறு- இந்த மாச்சரியம் மேலும் வளரும் தன்மையில் கிளர்ச்சிகள் உருவாக்கப்படுவதும், அங்கு உள்ள தமிழர்களுக்குப் பேராபத்