உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

முன்னுரை திரு.நாவலர் இரா. நெடுஞ்செழியன், எம்.ஏ. 'அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள்' நூல் வடிவம் கொண்டு, அழகும் கவர்ச்சியும் ஒருங்கே ஏற்று, என் கைக்கு வரப்பெற்று மிக்க பேருவகையுற்றேன். அறிஞர் அண்ணா அவர்கள் 'திராவிடநாடு' இதழ் மூலம் அருமைத் தம்பிமார் 'களுக்கு எழுதிவந்த முடங்கல்கள் அனைத்தும் நூல் வடிவம் பெற்றால், அந்த நூல் கருத்துக்கருவூலமாகத் திகழப்பெறுமே என்ற வேணவா என் உள்ளத்தில் நீண்ட நாட்களாக எழுந்த துண்டு. என்னைப்போன்றே பல்லாயிரக்கணக்கான தம்பி மார்களுக்கும் வேணவா கிளர்ந்தெழுந்திருக்கும் என்பது உறுதி. அந்த வேணவாவை இனிது நிறைவேற்றி வைக்கும் அரும்பெருந் தொண்டை, 'பாரி நிலையத்தார்' செய்திருப்பது கண்டு பூரிப்படைகிறேன். பாரி நிலையத்தாரை வரவேற்றுப் பாராட்டி வாழ்த்துகிறேன். அறிஞர் அண்ணா அவர்களின் எழுத்து வன்மையையும், அவரது எழுதுகோல் முனையிலிருந்து உருப்பெற்றெழுந்து நாடெங்கணும் வெற்றியுலாவரும் கதைகள்- கட்டுரைகள்- நாடகங்கள் - திரைப்பட வசனங்கள் - எழுத்தோவியச் சுவ ரொட்டிகள் - துண்டு அறிக்கைகள் ஆகியவற்றையும், அவற் றில் தமிழ்மணம் மிகச் சிறந்த முறையில் கமழ்வதையும், இனிய ஓசை பயக்கும் சொற்கள் அருவியின் வீழ்ச்சியெனத் தங்கு தடையின்றிப் பாய்ந்து துள்ளிக் குதித்து ஓடுவதையும், கருத்துக்கள் செறிந்து காணப்படுவதையும், உவமை நயங்கள் பெருவாரியாக ஆங்காங்குப் பளிச்சிட்டு மின்னுவதையும், அறிவும் ஆற்றலும் - உண்மையும் உயர்வும்-திண்மையும் திட்பமும் - சொல்லழகும் பொருளாழமும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு துள்ளிக் குதிப்பதையும் தமிழ் கற்றறிந்த நல்லறிவு படைத்தார் அனைவரும் நன்கு உணர்வர். தமிழின்பத்தை எல்லா வகையிலும் சுவைக்க விரும்புவோர், இந்நூலைச் சுவைத்தாலே போதும். எல்லா