உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

94 பம்பாயில்!- இங்கா கட்டுவார்கள்! பம்பாயில்தான். கோடீஸ்வரர்களின் கோட்டத்தில்தானே, இத்தகைய கொலு மண்டபம் அமைக்க முடியும்; அமைக்கிறார்கள். இந்த பவனத்தில், வெளிநாட்டார் வந்து தங்க, வகை வகையான ஏற்பாடுகள். வெளியிலிருந்து இங்கு வரும் மாணவர்களுக்கு அறுசுவை உண்டி. செவிச் சுவை உண்டு. . சிந்தனைக்கும் விருந்து தருவார்கள் -படிப்பக மூலம். இவைகளுக்கான நிதிதிரட்டும் ஏற்பாடு,விமரிசையாகத் துவக்கப்பட்டு வேகமாக வளர்ந்து, இப்போது வெற்றிக் கட்டத்தை நோக்கித் துரித நடைபோட்டுச் செல்கிறது. வெளிநாடுகளிலே வதியும் இந்தியர்கள்! - என்ற சொற் றொடரைக் கவனித்தாயா, தம்பி. பொருள் எளிதாயிற்றே, இதை ஏன் கவனப்படுத்துகிறாய், என்று கேட்டுவிடாதே. பொருள் எளிதுதான், ஆனால் இதிலே புதை பொருளும் இருக் கிறது, அதைக் கண்டெடுப்பது அவ்வளவு எளிதல்ல. இந்தியர்கள் என்ற பட்டியலில் நாமும் இருக்கிறோம். நம்மவர்கள் வெளிநாடுகளிலே இருக்கிறார்கள்-ஆமாம். பல இலட்சம்! வடக்கத்தியர்களும் வெளிநாடுகளிலே இருக் கிறார்கள். வெளிநாடுகளிலே சென்றுள்ளவர்களை, வடவர் திராவிடர் என்று இரு பிரிவாக்கிக் காட்டுவதற்குக் காரண மும் இருக்கிறது அதிலே நாடு அறியவேண்டிய கருத்தும் நிச்சயமாக இருக்கிறது. வடவர் வெளி காடுகள் சென்று வதிகிறார்கள் - திராவிடர் வெளிநாடு சென்று வதைபடு கிறார்கள். வெளிநாடு சென்றுள்ள வடவரில் பதினான்கணா பாகம், முதலாளிகளாய், நிலச்சுவான்தார்களாய், ஆலை களின் சொந்தக்காரர்களாய் வாழ்கிறார்கள். அவர்கள் சென்று வாழும் இடங்களிலே, அரசியல் சூத்திரக் கயிறுகளையும் கைப்பற்றியிருக்கிறார்கள். வெளிநாடு சென்றுள்ள வடவரிலும். கிழக்கு ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு நாடுகள் ஆகிய பகுதிகளிலே சென்று தங்கி, சீரும் செல்வாக்கும் பெற்றுள்ள வடவர்களுக்கு அங்கே உள்ள பிரச்சினை ; சொத்துகள் வாங்க உரிமை தரப்படவேண்டும்; அரசியல் ஆதிக்கத்திலே கிடைக்கும் பங்கின் அளவு அதிக் மாகிக்கொண்டிருக்க வேண்டும்; வேறு வேறு நாட்டவரிட மிருந்து கிளம்பக்கூடிய வியாபாரப் போட்டிகளை வேரறக் களைவதற்கு இந்திய சர்க்கார் தக்க திட்டம் தயாரித்துக் கொண்டு பணியாற்ற வேண்டும்; என்பவைகளாகும்.