பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xv 27. சிந்தனைத் தெளிவு பெற்றுச் சிறந்தவர் எவரும் போற்றும் சுந்தரர் தம்மை அன்புத் - தோழராய் ஏற்றுக் கொண்ட செந்தழல் மேனி யானின், செந்தமிழ்க் காதலானின், அந்தமில் இன்பத் தானின் அடிஅவர் முடிமேல் வாழ்க. 28. எழுபதில் ஒன்று போக எஞ்சிய அகவைக் குள்ளே எழுபதின் மேலாம் நூல்கள் எழுதிய எழுத்தின் வேந்தர் பழுதிலாப் பண்பர், அன்பர் பரிசுகள் பெற்ற நூலோர், விழுமிய மனைவி மக்கள் விழுதெனப் பெற்றோர் வாழ்க, 29. உலகெலாம் படைத்துக் காக்கும் ஒப்பிலான் அருளில் மூழ்கிப் புலங்களைத் திருத்திக் காத்துப் புவிசுமை நீக்கி, இன்ப நலமெலாம் பெருக்க வல்ல நல்லநூல் இன்னும் ஆக்கி இலகுநற் சான்றோர் வாழ்த்தை ஏற்றிவர் இனிது வாழ்க, 30. இளமையில் பெற்ற துன்பம் யாவையும் வென்ற வீரர், வளமொழித் தமிழைக் கற்று வறுமையை வென்ற குரர்,