பக்கம்:தம்ம பதம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்பம் ☐ 53

212. போகத்திலிருந்து சோகம் தோன்றுகிறது;

போகத்திலிருந்து அச்சம் தோன்றுகிறது;
போகத்தை விட்டவனுக்குச் சோகமில்லை;-
பயம்தான் ஏது?

(6)

213. காமத்திலிருந்து சோகம் தோன்றுகிறது;

காமத்திலிருந்து அச்சம் தோன்றுகிறது;
காமத்தைக் கடந்தவனுக்குச் சோகமில்லை;
பயம்தான் ஏது? (7)

214. பேராசையிலிருந்து சோகம் தோன்றுகிறது;

பேராசையிலிருந்து பயம் தோன்றுகிறது; :பேராசையற்றவனுக்குச் சோகமில்லை;
பயம்தான் ஏது?

(8)

215. சீலங்கள் நிறைந்து மெய்யறிவு பெற்றவனை, அறத்தில் நிலைபெற்றவனை, வாய்மையாளனை , தன் கருமத்திலேயே நாட்டமுள்ளவனை உலகம் அன்போடு அரவணைத்துக் கொள்கிறது. (9)

216. வர்ணனைக்கு எட்டாத நிருவாணப்பேற்றில் நாட்டங்கொண்டவன், உள்ளத்தில் நிறைவு கொண்டவன், காமங்களைக் கடந்த மனமுள்ளவன்,-அவனே ஒடும் ஆற்றை எடுத்துச் செல்வோன் [1] என்று கூறப்படுவான். (10)

217. தூரதேசத்தில் நெடுங்காலம் சென்றிருந்தவன் சேமமாகத் திரும்பி வருகையில் சுற்றத்தாரும், நண்பர்களும், அன்பர்களும் அவனைக் களிப்போடு வரவேற்று உபசரிப்பார்கள். (11)


  1. ஓடும் ஆற்றை எதிர்த்துச் செல்வோன் - ‘உத்தம ஸோதோ’ அல்லது ‘ஊர்த்வம் ஸ்ரோத’ என்று பெளத்த நூல்களில் கூறப்படுவோன். உலகம் போகிற போக்கில் செல்லாமல் இவன் எதிர்த்துச் செல்பவன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/55&oldid=1357968" இலிருந்து மீள்விக்கப்பட்டது