பக்கம்:தம்ம பதம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 ☐ தம்ம பதம்

244. உயிர்க்கொலை செய்வோனும், பொய் பேசுவோனும், பிறர் பொருள்களைப் பறிப்போனும், பிறர் மனை நண்ணுவோனும், (12)

245. வெறி கொடுக்கும் மது வகைகளைப் பருகுவோனும் இவ்வுலகிலேயே தம் வேர்களைத் தாமே கல்லியெறிகிறார்கள். (18)

246. ஏ மானிட, இதை அறிந்து கொள்! பாவத்தை எளிதில் அடக்க முடியாது. பேராசையும் தீயொழுக்கமும் உன்னைத் தீராத துக்கத்தில் அழுத்தாமலிருக்கட்டும். (14)

247. மக்கள் தங்கள் தகுதிக்கும் தரும சிந்தனைக்கும் தக்கபடிதானம் செய்கின்றனர். பிறருக்கு உண்ண உணவும் குடிக்கப் பானமும் அளிப்பதைக் கண்டு பொறாமைப்படுவோர் பகலிலோ இரவிலோ மன அமைதி பெறுவதில்லை. (15)

248. இந்தப் பொறாமை உணர்ச்சியை அழித்தவன் - வேரோடு அழித்தவனே-பகலும் இரவும் அமைதி பெறுவான் . (16)

249. காமவெறி போன்ற அனல் வேறில்லை; துவேஷத்தைப்போல் பற்றிக்கொள்ளும் முதலைவேறில்லை. | தெளிவின்றி | மயங்குதலைப் போன்ற வலை வேறில்லை; ஆசைகளைப்போல் | அடித்துக் கொண்டு போகும் | ஆறு வேறில்லை. (17)

250. பிறர் குறையைக் காண்பது எளிது; ஆனால் தன் குற்றத்தை அறிதலே அரிது. மற்றவர் குறைகளை ஒருவன் பதரைத் தூற்றுவதுபோல் துாற்றி விடுகிறான். ஆனால், சூதாட்டத்தில் கரவடமுள்ளவன் காய்களை மறைப்பது போல், தன் குறைகளை மட்டும் மறைத்துக் கொள்கிறான். (18)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/62&oldid=1358027" இலிருந்து மீள்விக்கப்பட்டது