பக்கம்:தயா.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாது தான் - 39 'என்னப்பா பாலு, ஹோட்டலில் கண்டதைச் சாப் பிட்டு, வயிற்றைப் பாழ் பண்ணிண்டுட்டியா? பரிமாறின பண்டம் அப்படியே இருக்கே, தொட்டுப்பார்த்ததோடு சரியா. உடம்பு சுகமில்லையா?” 'இல்லேம்மா, பாலு பெரிய மனுஷனாயிட்டான்' என்னைக் குற்றுயிராக்கியதல்லாமல் கொத்தி வேறு ஆகனுமா! - - அப்பா அவசரமாய் வருகிறார், போகிறார். "ஒரு முக்கியமான deal. மூச்சுவிட நேரமில்லை. இந்தத் தோல் மார்க்கெட் இருக்கே. இது ஒரு பெரிய தண்டா. இன்னிக்குச் சிகரத்தில் இருக்கோமென்று தங்கி, மூச்சு வாங்கிக்கொள்ள முடியாது. விலை சரிஞ்சால் தடால் சாக்கடைதான்- என்ன ஒருமாதிரியாயிருக்கே, what is wrong with you?” சிக்கு, சக்கு, சகுந்தலா நாமம் என்ன திவ்யமானாலும் ரூபத்துக்கு இணை பாகுமோ? ரூபத்தின் நிழல்களைத்தான் நாமம் தரமுடியும். தவிர, நாம ஜபத்தில் நாகரூபம்தான் கிட்டும். அதுவும் நிழல்கள். ந. தரிசனம், தானே தந்த பின் நாமஜபம் என்ன பயன்? షో 5 த - 段 அதுவும் என்னைத்தானே வந்தடைந்த தரிசனத்தை என்னென்று சொல்வது? நாமம் தாண்டியபின் நாமமே நெஞ்சில் பாய்ந்த கோடாரியாகி விடுகிறது. சகுந்தலை, சக்கு என்னும் நாம தூரத்திற்கு அவளை நாம் பிரிந்திருப்பதே என்னால் தாங்க முடியவில்லை. நாமக் கோடரி பிளந்து கூறாய் நெளிகிறேன். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/95&oldid=886399" இலிருந்து மீள்விக்கப்பட்டது