காட்டுவதுண்டு. சில உணவு வகைகள் நன்றாகவும் செய்யக்கூடிய திறமை வாய்ந்தவள்.
இந்தத் தடவை தரங்கம்பாடிக்குப் போகப் போகிறோம். கோடை விடுமுறை அங்குதான்' என்றார் வடிவேலு.
உடனே உற்சாகம் பிறந்துவிட்டது சுந்தரத்திற்கு. 'மாமா, தரங்கம்பாடி எங்கே இருக்கிறது? அங்கே பார்க்கவேண்டியவை என்ன இருக்கின்றன? ஜின்காவிற்கு வேலை கிடைக்குமா?’ என்று கேள்வி மேல் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான் சுந்தரம்.
'தரங்கம்பாடிக்கா போகப் போகிறோம் ? பேரைக் கேட்டாலே நன்றாக இருக்கிறது. தரங்கம் பாடிக்கும் எதற்கு இந்தத் தடவை போகத் தீர்மானித்திருக்கிறீர்கள்? அப்பொழுது தரங்கம் பாடிக்குப் போனால் சமையல் எல்லாம் வேண்டி யிருக்காது. நான் கற்றுக்கொண்டதெல்லாம் வீண்தானா?' என்று அவளும் கேள்விக்கு மேல் கேள்விகளை அடுக்கினாள் கண்ணகி.
"அப்பா...எனக்கே மூச்சு வாங்குகிறது. நீ கேள்விக் கணைகளைத் தொடுத்துவிட்டால் வில்லுக்குப் பேர்போன அர்ஜுனனே தோற்றுப்போவான்' என்றான் சுந்தரம்.