பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34



கொண்டே அனுபவத்தில் அனேகமாகச் சரியாக இவ்வளவு ஆழத்தில் என்று கணக்கிட்டுச் சொல்லி விடலாம்."

'இன்னும் அரையடி தோண்டினால் புதையல் கிடைக்குமா, அல்லது புஸ்வாணமாகப் போய் விடுமா?" என்று கேட்டான் சுந்தரம்.

'புஸ்வாணமாக நிச்சயமாகப் போகாது. இன்னும் ஒருநாள் பொறுத்துக்கொள், கட்டாயம் வெற்றி கிடைத்துவிடும். இன்னும் சுமார் அரையடி தான் பாக்கி. இப்பொழுதே தோண்டுவதற்கு மண் மிகக் கட்டியாக உள்ளது.'

"அப்படியா, அப்பப்பா! இந்தக் கடப்பாரை யைக்கொண்டுதோண்டித் தோண்டிக் கையெல்லாம் கொப்புளமாகிவிட்டது. எப்படியாவது ஒருநாளை மெல்ல ஒட்டலாம். இன்று இவ்வளவோடு நிறுத்தலாம், அவசரமில்லை' என்றான் சுந்தரம்.

'அடே! உனக்கு நல்ல விருந்து போடப்போகி றேன். மூக்குப் பிடிக்கத் தின்னலாம். பயப்படாதே" என்று கேலி செய்தாள் கண்ணகி. ஆனால் ஒருநாள். 24 மணி நேரத்திற்குள் இப்படி எதிர்பாராத இடைஞ்சல்கள் வரும் என்று அவர்கள் மூவரும் கனவில்கூட எண்ணியிருக்க மாட்டார்கள்,