பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை

 செந்தமிழ்ச் செல்வர் உயர்திரு. பெ. தூரன் அவர்கள் குழந்தைகளுக்கு நல்ல நல்ல பாட்டுகளும் சுவையான கதைகளும் சொல்பவர். எழுதுபவர். அவருடைய கதைகளில் சிறுவர் சிறுமியருக்குச் சிந்தனையூட்டக்கூடிய சிறந்த கருத்துகள் இருக்கும். சிரிப்பூட்டும் சீரிய விஷயங்கள் இருக்கும். வாழைப்பழத்தில் செந்துார மருந்து வைத்துக் கொடுப்பதுபோல், திரு. தூரன் அவர்கள் கதை வடிவில் அரிய பெரிய கருத்துகளை அற்புதமாகப் புகட்ட வல்லவர். புகழ்மிக்க குழந்தை எழுத்தாளர். செந்தமிழ்ப் பேரறிஞர். அவரிடமிருந்து இப்பொழுது தமிழ் நாட்டுக் குழந்தைகளுக்குத் தரங்கம்பாடித் தங்கப் புதையல், என்ற தமிழ்ப்புதையல் கிடைத்துள்ளது. நல்ல விறுவிறுப்பான கதை. படிக்கப்படிக்கச் சுவை தரக்கூடிய கதை.