இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விடுமுறையிலும் இவ்வாறு புதிய ஆராய்ச்சியிலும் துப்புக் கண்டு பிடித்தலிலும் ஈடுபட வேண்டுமென்று பேராசிரியர் வடிவேலு அவர்களை மனதார வாழ்த்தினார்.
ஜின்கா கடைசி முறையாக ஜங்ஜங்கென்று குதித்துவிட்டு, சப்இன்ஸ்பெக்டருக்கு ஒரு சலாம் செய்துவிட்டுச் சென்னையை நோக்கிப் புறப்பட்டது.
'யாரை மறந்தாலும் உன்னை மறக்கவே முடியாது' என்று ஜின்கா முதுகில் சிரித்துக் கொண்டே தட்டிக் கொடுத்தார் சப்இன்ஸ்பெக்டர்.